ஞாயிறு, நவம்பர் 24, 2019

தாழ் திறவாய்!


தாழ் திறவாய்!

[வல்லமை இதழின் 233-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


வானுயர் கோவிலில் தொழுதுநிற்போம்
பள்ளிவாசல்கள் தோறும் ஓதிநிற்போம்
தேவ ஆலயம் தேடி ஓடிடுவோம்
ஆதிமூலத்தை காண ஏங்கிடுவோம்!

காட்டினில் இறையைத் தேடிடுவோம் - மந்திர
பாட்டினில் அவன்தாள் நாடிடுவோம் - வெற்று
ஏட்டினில் சொல்லிய வழியேல்லாம்
போட்டிப் போட்டு செய்திடுவோம்!

ஆண்டுகள் பல தவஞ்செய்து நின்று
கண்டிடும் வழியென்னி காத்துநிற்போம்
கண்டவர் விண்டிலர் என்று சொல்லி
கண்டிட தினந்தினம் ஏங்கிடுவோம்!

நல்லுரை சொல்லிடும் வேதமெல்லாம் - பிறர்
வெந்துயர் தீர்த்திடும் அன்பர்தனை
முந்திய தெய்வமாய் வைத்தையுணர்ந்து - நம்
உள்ளுரை பரம்பொருள் மீட்டிடுவோம்!

ஈட்டிடும்பொருள் பிறர்க்கீழ்ந்திடுவோம்!
வாட்டிடும் பிறர்பிணித் தீர்த்திடுவோம்!
நாட்டினில் வறியவர் வாழ்ந்திடவே
பூட்டிய மனத்தாழ் திறந்திடுவோம்!

திங்கள், நவம்பர் 18, 2019

வேடந்தாங்கிய பறவைகள்


வேடந்தாங்கிய பறவைகள்
[வல்லமை இதழின் 232-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



இயற்கையன்னை தானளித்த
இன்பபுரி இவ்வையகத்தை
நகரமயமாக்கி வைத்து
நரகமதை உருவாக்கினோம்!

நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
நிலமடந்தை வளமொழித்தோம்
கால் வைக்கும் இடமெல்லாம்
கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!

பச்சைநிறத் தாயவளின்
கச்சைமலை முகடழித்து
மிச்ச மீதம் ஏதுமின்றி
தாய்ப்பாலை வீணடித்தோம்!

வான்பொழித்து மழையில்லை
கதிரவனால் அதிவெப்பநிலை
நில அதிர்வால் வீடில்லை எனக்கூறி
அப்பாவிப் பறவையென்ற
வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!


இயற்கை வளமழித்து

கான்க்ரீட் மரக்கிளையில் 
வண்ணமெல்லாம் தானிழந்து

திங்கள், நவம்பர் 11, 2019

பிஞ்சு (ெ)நஞ்சு


பிஞ்சு (ெ)ஞ்சு



 

[வல்லமை இதழின் 231-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
கனியமுதுக் குழந்தையென்றால்
கள்ளமில்லா புன் சிரிப்பும்
வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
கண்முன்னே நின்றதொரு காலமம்மா-அது
கனவாகப் போனதிந்த காலமம்மா

வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சில்
சூதானமாய் இருக்கச் சொல்லி
நஞ்சதனைக் கலந்திட்டோம்

வெம்பியிங்கு நிற்க வைத்தோம்
வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்

இன்ப துன்பமெல்லாமே
இரு நொடியில் மறந்துவிடும்
கள்ளமில்லா நெஞ்சதனில்
தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்
நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்

பஞ்சு போன்ற நெஞ்சதனை
போட்டி பல போடச் சொல்லி
ஊடகச் சோதியிலே
எரிபானையாக்கி விட்டோம்
ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்

அறிவு வளர்க்கும்
கல்வியதை கற்பிக்காமல்
வெற்று வெற்றியே குறிக்கோளாய்
முற்றிபோகச் செய்துவிட்டோம்
முளைக்குருத்தை முற்செடியாய் ஆக்கிவிட்டோம்

பெற்றோர் தம் பேராசையால்
பிஞ்சினிலே பழுத்து  
சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
மறைந்ததுவே அவர்தம் குழந்தைத் தனம் - இதில்
வெற்று கொண்டாட்டமே மழலையர் தினம்


செவ்வாய், நவம்பர் 05, 2019

மனக்கண்ணாடி

மனக்கண்ணாடி

வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
அரிதாரம் தனை நீக்கி
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?