திங்கள், மார்ச் 09, 2020

புது உதயம்

புது உதயம்


காடுவெட்டிக் கழனியாக்கி
கதிர்நெல்லை விளைவித்தார்!
பட்டினியே உணவென்று வாழ்கின்றார்

பள்ளம் மேடு சீராக்கி
வீடுகட்டி வாழவைத்தார்!
நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்

பாடுபட்டு,
நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்

நிலையான வாழ்வு
நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
புது உதயம் கண்டிடுவோம்!
புதியதோர் உலகம் செய்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக