திங்கள், டிசம்பர் 28, 2020

பிடிகொம்பு

பிடிகொம்பு

[வல்லமை இதழின் 289-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


வெட்டி ஒட்டி கச்சிதமாய் இணைத்து
தட்டிச் செதுக்கும் சிற்பியைப் போல்
கட்டி அழகு பார்க்க வைக்கும்
ஆடைகள் தைத்துக்கொள்ள யாருமில்லை….

பல்பொருள் அங்காடிகளால் படுத்துவிட்டப்
பக்கத்து மளிகைக்கடை…
இணையவழி வணிகத்தால் அழிந்துவரும்
சிறுவணிகக் கூட்டம்…
துரித உணவைப் போல் கேட்டதும்
துரிதமாய்க் கிட்டும் தைத்த ஆடைகள்…
வசதியற்றோரின் வாழ்வாதாரம்
கிழிந்துப்போனது நிறுவணப்படுத்தலால்…

சுகத்தைக் கெடுக்கும் நுண்ணுயிரி
முகத்தை மூடும் கவசம் தைத்து
பசியைத் தீர்க்க வழிசெய்த நிலைமை என
அடித்துச் செல்லும் காலச்சுழற்சி வெள்ளத்தில்
பிடிகொம்புகள் சில கிட்டும் அவ்வப்போது!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக