வெள்ளி, டிசம்பர் 09, 2011

கலவை – 11


நான் முன்பே எழுதியபடி, தில்லியில் VVIP-களின் ஊர்திகளில் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்துவது என்பது அடிக்கடி நடக்கும் பிரச்சனை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் protocol சரியில்லை என்றும். அவர்களின் ஊர்திகளுக்கும் மத்திய அமைச்சர்களின் ஊர்தி போல் விளக்குகள் பொறுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது மட்டும் நடந்துவிட்டால், தில்லி காவல் துறைக்கு நிரந்தர தலைவலிதான். ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சர்கள், நீதிபதிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மேலும் 500 பேரை சேர்த்துவிட்டால் அவ்வளவுதான். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா உறுப்பினர்களின் சலுகைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பீகாரைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேறு தங்களுக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணச்சீட்டு முன்பதிவு கிட்டுவதில் சிரமம் இருப்பதாகப் புகார் கூறியுள்ளனர். நாடாளு மன்றம் ஒரு வாரம் நடைபெறவே இல்லை, இதைப் பற்றி மக்கள் யாரிடம் முறையிட முடியும். ’பண்டாரம் சோத்துக்கு அலைகிறது, லிங்கம் பஞ்சாமிர்த்துக்கு அழுகிறதுஎன்று கூறுவார்கள்; அது இதுதான்.

இந்திய அரசு கூகுள், முகநூல் ஆகியவற்றில் காட்டப்படும் 255 தகவல்களை நீக்கும்படிக் கோரியுள்ளது (அவற்றில் 8 வெறுப்பைக் காட்டும் பதிவுகள்). ஒரு புறம் அமெரிக்கா (ஹிலேரி கிளிண்டன்) மற்ற நாடுகளை வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் அவர்கள் இதற்குச் சம்மதிப்பது கடினமே. நம் நாட்டில் நம் பத்திரிக்கை மற்றும் மற்ற ஊடகங்களையே கட்டுப் படுத்த முடியவில்லை. அதே நேரம் நம் வலைத் தலங்களிலும் சில நேரங்களில் எல்லைகள் மீறப் பட்டு வருவதையும் மறுக்க முடியாது. வலை தளங்களில் சீண்டல்கள் சில நேரங்களில் வெறுப்புத் தீயை வளர்க்கத் தான் செய்கின்றன. எல்லைகள் மீறப் படாத வரை அனைத்தும் சரி. அது மீறிவிட்டால் சில நேரங்களில் கடிவாளங்கள் அவசியமாகிவிடுகின்றன.

2-ஜி வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் சாமியின் வாதத்தை டிசம்பர் 17-ம் தேதி அளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.  

பெட்ரோல் விலை சற்று குறைத்திருக்கிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் விலையேற்றத்தில் அது தலைகீழ். முழம் ஏற்றினால், விரல்கடை அளவு குறைப்பார்கள்.

அருகாமை நாடுகளைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தான்  தற்போது (விலை குறைப்பிற்கு பின்னரும்) பெட்ரோல் விலை அதிகம்.

            பாகீஸ்தான்                 -           `.48.64
            பங்களாதேஷ்              -           `.52.42
            இலங்கை                    -           `.61.38
           
            இந்தியாவில் விலைகுறைப்பிற்கு பின்னரும் இது `.66.42  (தில்லியில்) ஆக உள்ளது. அமெரிக்காவில் வெறும் `.44.88 (ஹூம்). ஆனால், டீசல் விலை `.40.91 க்கு விற்பது மற்ற நாடுகளைப் பார்க்கும் பொழுது குறைவுதான். அதற்காகத் தேற்றிக் கொள்ளலாம். முக்கிய காரணம் excise duty தான் அது லிட்டருக்கு `.14.78.

நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைகளுக்கு மக்கள் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான மசோதாவை மத்திய நாடாளுமன்ற நிதிக் குழு நிராகரித்துள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையிலேயே அதற்கு போதிய வரவேற்பில்லை. குறிப்பாக சிதம்பரம், நந்தன் நிலேகனி கூடுதல் நிதியாகக் கேட்ட 15000 கோடியை ஏற்கவில்லை. இதில் இந்த சட்ட சிக்கல் வேறு. ஆனால், பிரதமர் இதில் முனைப்புடன் இருப்பதால் குழுவின் எதிர்ப்பை மீறியும் மசோதா அறிமுகப் படுத்தப் படலாம்.

சென்ற வாரம் ஹிந்தி திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் காலமானார். 1940 களின் ஆரம்பத்தில் நடிக்க வந்த அவர் அப்போதைய முன்ணனி நடிகை சுரையா-வுடன் இணைந்து தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்தாலும் அதன் பெருமைகள் சுரையாவிற்கே சென்றதைக் கண்டு, தன் பயணத்தை வேறு பாதையில் திருப்பினார். பின்னர் நடிகர் அசோக் குமாரால் அவரது திறமை கண்டெடுக்கப் பட்டு வெற்றி கண்டார். தன் வெற்றியால் தன் நண்பர் குருதத் (என்னைப் பொறுத்தவரை ஹிந்தி திரையின் மிகத் திறமை வாய்ந்த நடிக இயக்குனர் என்றால் அது குருதத் தான்). வசனங்களை வேகமாக உச்சரிப்பார்;  Style மன்னர் (ரஜினிகாந்த் ஞாபகம் வருகிறதா?). 50-60, ராஜேஷ் குமார் வரும் வரை, பெண்களின் கனவு நாயகன்; அதற்கு பின் வித்யாசமான கதையமைப்புகளைக் கொண்ட படங்கள், 70களின் பின்னால் கவர்ச்சி நாயகிகள் என்று எப்பொழுதும் தன்னைப் புதுபித்துக் கொண்டே வந்துள்ளார். ஆர்.கே.நாரயணின் கதையை “கைட்” என்று தனக்கேற்றவாறு திருத்தி அவரது தம்பி விஜய் ஆனந்தால் இயக்கப் பட்ட படம் இந்திய திரைப்படங்களுக்கு ஒரு மைல் கல். அவரது இசை ஆர்வம் அவர் படங்களின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. அவரது படத்தின் அணைத்து பாடல்களுமே ஹிட் தான்.  60களுக்கு முன் வரை முஹமத் ரஃபியுடனும், பின் கிஷோருடனும் இணைந்து அவர் அளித்துள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

நேற்று சேவாக் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது ஆட்டக்காரர். சேவாக் அதிரடி ஆட்டக்காரர். ஆனால், இவ்ரால் மட்டும் எப்படி நீண்ட innings ஆட முடிகிறது. பொதுவாக, இது போன்ற அதிரடி மட்டையாளர்களின் பலமே அவர்களின் hand-eye coordination தான். சேவாகிடம் அது இருக்கிறது. சாதாரணமாக சேவாகின் footwork தான் அவர் பலவீனம் என்று கூறுவார்கள். ஆனால், அதுவே cut விளையாடுவதற்கு நிறைய நேரம் தருகிறது என்று நினைக்கிறேன். அவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்துவது அவரின் அதிரடிகள் offside-ல் இருப்பதுதான். சாதாரணமாக அதிரடி ஆடுபவர்கள் leg-sideல் தான் பலமாக அடிப்பார்கள்; அதனால் cross-bat விளையாடி ஆட்டமிழ்ப்பார்கள். ஆனால் சேவாக் பொதுவாக சுழல் பந்தை தான் leg-sideல் ஆடுவார். அதுகூட அவர் நீண்ட innings ஆடுவதற்கு காரணமாக இருக்கிறது போலும்.

4 கருத்துகள்:

  1. ”கலவை” என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.... - சினிமா, விளையாட்டு, அரசியல் என்று கலக்கல் பகிர்வு....

    தேவ் ஆனந்த் - :( அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...

    பதிலளிநீக்கு
  2. nice post.. thanks to share.. please read my tamil kavithaigal in www.rishvan.com

    பதிலளிநீக்கு
  3. ரிஷ்வன் தங்கள் வருகைக்கு நன்றிகள்.

    திருக்குறளை புதுக்கவிதை வடிவில் எழுதும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு