வியாழன், ஏப்ரல் 11, 2013

யுகாதி


ன்று யுகாதி ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

வட மொழியின் யுக்மம்” (இணை/ஜோடி) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவை யோகம், யுகம் ஆகியச் சொற்கள். யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. யுகம் என்றால் இரண்டின் சந்திப்பு அல்லது இணைப்பு என்று பொருள்.

ராசிகள் அல்லது நக்ஷத்திரங்கள் இணைவதும் யுகம். இந்த இணைப்பு ஆதிராசியான மேஷத்தில் நிகழும் பொழுது அது யுகாதி எனப்படும். யுகாதியில் வரும் ’யுகம்’ என்ற வார்த்தைக்கும் சதுர்யுகம் என்பதில் வரும் ‘யுகம்’ என்ற வார்த்தைக்கும் இணைப்பு என்பதைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

வேறு சில கால சந்தி(இணைப்பு)களில் இந்த யுகம், யுகாதி என்ற வார்த்தைகள்  பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்….

1.           சந்திரமான, சௌரமான யுகம் :  சந்திர, சூரிய ஆண்டுகள்.
2.           ப்ரஹஸ்பதி யுகம் :   இது 12 ஆண்டுகளைக் கொண்டது. சூரியன், சந்திரன், புஷ்ய (பூசம்) நக்ஷத்திரம், குரு ஆகியவை ஒரே ராசியில் இணையும். இதைக் கொண்டு தான் கும்பமேளா கணிக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்று வேறுபாட்டுடன் 60 வருடங்கள் கொண்டதாகக் கூறப்படுவதுண்டு (சூரியன், சந்திரன், பூசம், குரு ஆகியவற்றுடன் சனியும் இணையும்)
3.           சஹஸ்ர சதுர் யுகம்  :         ஒரு பருவ ஆண்டு (tropical year based on vernal equinox) நகர்ந்து ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க ஆகும் 1000 ஆண்டுகள் நான்கு யுகங்களாக பகுக்கப்பட்டு (400 க்ருத யுகம்; 300 த்ரேதா யுகம்; 200 த்வாபர யுகம்; 100 கலியுகம்) இருப்பது. [விளக்கங்களை பிரிதொரு சமயத்தில் தனி பதி்வாக முயற்சிக்கிறேன்].
4.           கவம் அயனம் :        இது நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் ஒவ்வொரு ஆண்டும் 365¼ நாட்களைக் கொண்டவை. முதல் ஆண்டு 365 நாளுடன் ஒரு கால் (பாதம் என்று கூறுவர்) நாள் இணைத்து அதைக் கலியுகம் என்றும், அடுத்த ஆண்டுகளில் 365 நாளுடன் மற்றொரு பாதங்கள்  இணைத்து அதை த்வாபர, த்ரேதா யுகங்கள் என்றும், கடைசி ஆண்டை க்ருத ஆண்டு என்றும் அழைப்பர். கடைசி ஆண்டின் கால் பகுதி முடிந்தவுடன் நாளின் மீதி பகுதி எதுவும் மீறாமல் இருப்பதால் அதை ஸத்ய அல்லது ரித யுகம் என்றும் கூறுவர்.
5.           ஸப்தரிஷி யுகம்        :         இது 2700 ஆண்டுகள் கொண்டது. ஸப்தரிஷி மண்டலம் ஒரு நக்ஷத்திரத்திலிருந்து அடுத்த நக்ஷத்திரத்திற்கு செல்ல 1000 வருடங்கள் ஆகும். பூமி தன்னைத் தானேச் சுற்றி, சூரியனையும் சுற்றுவதை அறிவோம். அதே போல் அதன் 23.5 டிகிரி சாய்வும் தலையாட்டி பொம்மைப் போல சுழலும். அப்பொழுது வான்மையத்தில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலமும் சுழலும். இதற்கான காலம் 2700 ஆண்டுகள் என வராஹமிஹ்ரர் கூறுகிறார். பாகவத, விஷ்ணு புராணங்கள் ஸப்த ரிஷிகள் மகத்திலிருந்து பூராட நக்ஷத்திரம் செல்லும் சமயத்தில் மகத வம்சாவளியைத் தொகுத்து பரிக்ஷிதிலிருந்து நந்த வம்சம் வரை விவரித்துள்ளது. இது 1015 ஆண்டுகளைக் கொண்ட வம்சாவளியுடன் ஒத்துப் போவதாகக் கூறுகிறார்கள்.

இவற்றைத் தவிர ரோமக சித்தாந்தம், சூர்ய சித்தாந்தத்திற்கு முந்தைய சித்தாந்தங்கள், சூரிய சித்தாந்தம், மார்கண்டேய யுகம், சஞ்சய யுகம், ஆர்யபட்டர் சித்தாந்தம், ப்ரஹ்ம ஸ்புடிக சித்தாந்தம் ஆகியவை வெவ்வேறு ஆண்டுக் கணக்குக்களைக் கொண்டுள்ளன.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!

9 கருத்துகள்:

  1. விரிவான விளக்கங்களுக்கு நன்றி...

    யுகாதி தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வருக்கைக்கும் த.ம. வாக்கிற்கும் நன்றிகள் ரமணி!

      நீக்கு
  4. தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
    இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!

      தங்களுக்கும் என் இதயங்கனிந்தப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      நீக்கு