சனி, அக்டோபர் 01, 2011

அர்களம் - 4 [ஸ்லோகம்]


அர்களம்

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்கா க்ஷமா ஷிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே    ௧
[தேவியின் மேற்கண்ட 11 நாமங்களைக் கூறி வணங்குகிறோம்]

மதுகைடப வித்ராபி வித்யாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[மது, கைடபகர்களை அழித்து, ப்ரஹ்மனுக்கு வரமளித்தவளே (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை (த்வி என்றால் இரண்டு என்று பொருள்; இரண்டாமவர் என்றால் அடுத்தவர், அதாவது நம்மைச் சேராதவர் என்பதால் குறிப்பால் பகைவர் என்பதைக் குறிக்கும்) அழி!]

மஹிஷாஸுர நிர்நாச விதாத்ரி வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௩
[மஹிஷாசுரனை அழித்தவளே, விதாத்ரிக்கு (ப்ரஹ்மன்) வரமளிப்பவளே  (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வந்திதாங்க்ரியுகே தேவி தேவி ஸௌபாக்யதாயினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௪
[(ப்ரஹ்மாதி முனிவர்களால்) வணங்கப்பட்ட பாதங்களை உடையவளே, நற்பயன்களை தருபவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ரக்தபீஜ வதே தேவி சண்ட முண்ட விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௫
[ரக்தபீஜன், சண்ட முண்டர்களை வதைத்தவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ சத்ரு விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௬
[சிந்தைக்கு எட்டாத (அடங்ககாத) பெருமைகளை உடையவளே, எல்லா பகைவர்களையும் அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ந தேப்ய: ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௭
[சண்டிகையே! எப்பொழுதும் பக்தியுடன் வணங்குபவர்களுக்கும், வணங்கும் எனக்கும் (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸ்துவத் பயோ பக்தி பூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௮
[பக்தியுடன் உன்னைத் துதிப்பவர்களின் வ்யாதியை நாசம் செய்யும் சண்டிகே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சண்டிகே சததம் யே த்வாம் (அ)ர்சயந்தீஹ பக்தித:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௯
[உனது திருவடியை எப்பொழுதும் பக்தியுடன் அர்ச்சிக்கும் அன்பர்களுக்கு சண்டிகையே (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ஸௌபாக்யம் (ஆ)ரோக்யம் தேஹி தேவி பரம் சுகம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧
[நற்பயன்களையும், ஆரோக்யத்தையும் சுகத்தையும் தரும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி த்விஷதாம் நாசம் விதேஹி முச்சகை:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௧
[பகைவர்களை நாசம் செய்யும் பலத்தை உண்டாக்கும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௨
[மங்களத்தையும், திரண்ட ஐச்வர்யத்தையும் உண்டாக்கும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வித்யா வந்தம் யஷஸ் வந்தம் லக்ஷ்மீ வந்தம் ஜனம் குரு
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௩
[திருவடிகளைத் தொழுதவர்க்கு வித்தை, புகழ், ஐச்வர்யம் ஆகியவை தரும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ப்ரசண்ட தைத்ய தர்பத்னி சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௪
[பராக்ரமசாலிகளான அசுரர்களின் அகந்தையை அழிக்கும் சண்டியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சதுர்புஜே சதுர்வர்கத்ர ஸன்ஸ்துதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௫
[நான்கு கைகளுடையவளும், நான்முகனால் துதிக்கப்பட்டவளுமான பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

க்ருஷ்ணேன ஸன்ஸ்துதே தேவி சாஸ்வத பக்த்யா த்வம் (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௬
[ஸ்ரீக்ருஷ்ணனால் நிலையான பக்த்தியோடு துதிக்கப்பட்ட அன்னையே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஹிமாசல சுதானாத் பூஜிதே பரமேசவரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி               ௧௭
[ஹிமாச்சல புத்திரியின் நாயகனால் (ஈஸ்வரனால்) பூஜிக்கப்பட்ட பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸுராஸுர சிரோ ரத்ன நித்ருஷ்ட சரணோ(அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௮
[தேவாசுரர்களின் தலையை ரத்தினமாக உடைய பாதங்களைக் கொண்டவளே (இங்கு வணங்கப்பட்ட என்றும் பொருள் கொள்ளலாம் சீவப்பட்ட தலைகள் காலடியில் கிடக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்) (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

இந்த்ராணி பதி ஸத்பவ பூஜிதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௯
[இந்திராணியால் தன் கணவனின் நற்குணத்திற்காக பூஜிக்கப்படும் பரமேசரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ப்ரசண்டதோர் தண்ட தைத்ய தப விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[சக்தி வாய்ந்த தோள்களை உடைய அசுரர்களின் எண்ணங்களை அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி பக்த ஜனோத்தாமதத்தானந்தோதயோ (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨௧
[பக்த ஜன உத்தமர்களுக்கு ஆனந்தத்தின் உதயமாக இருக்கும் தாயே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

பத்னீம் மனோரமாம் தேஹி மனோ வ்ருத்தான் ()னுசாரிணீம்
தாரிணீம் துர்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்            ௨௨
[மனோ விருத்தியை அனுசரித்து, கடக்க முடியா ஸம்சார ஸாகரத்தை தாண்டுவதற்கு உகந்த, நற்குடி பிறந்த, மனதிற்கு இனிய மனைவியை தருவாயாக]

       இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
       ஸ து ஸப்தசதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பத:
[இந்த அர்கள ஸ்தோத்திரத்தைப் படித்து தேவியின் மஹாத்ம்யம் படித்தால், அவருக்கு ஸப்தசதீ பாராயண பலன் கிட்டும்]

5 கருத்துகள்:

  1. அருமையான் அர்கள ஸ்தோத்திர பகிர்வுக்கு நன்றி.

    நவராத்திரி நேரத்தில் பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி, தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வுக்கு நன்றி சீனு.... தொடரட்டும் இந்த ஆன்மீகப் பயணம்.....

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. நவராத்திரி சமயத்தில் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

    அப்பா நீ திருடனுக்கு பிறகு எனக்கு மின்னஞ்சலில் வரவேயில்லை.

    பதிலளிநீக்கு
  5. ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி
    ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
    is left out in the first para

    பதிலளிநீக்கு