ஞாயிறு, அக்டோபர் 18, 2020

தலையாட்டி பொம்மைகள்

தலையாட்டி பொம்மைகள்

[வல்லமை இதழின் 278-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



மந்தை ஆடுகளாய்
மதியில்லா மாடுகளாய்
சுயம் கெட்டு
சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
சூத்திரங்கள் அழித்துவிட்டு
எடுப்பார்க் கைப்பிள்ளையென
ஏவல்கள் செய்திருந்து
விதியை தினம் நொந்து
வீண் பொழுதுப் போக்கிவிட்டுத்
தன்னம்பிக்கை ஏதுமின்றித்
தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
தாளத்திற்கு ஆடிவிட்டு
வேரருந்த விருட்சமென
வீணாகி விழ்ந்துள்ளோம்…

அறிவுக் கண் திறந்து
அறப்பொருளைத் தானுணர்ந்து
உண்மையை உணர்ந்தறியும்
உன்னத ஞானம் தரும்
நற்கல்வித் தேடிக் கற்று
எல்லோரும் மன்னரென்றக்
மக்களாட்சித் தத்துவத்தின்
மாண்பதனை மிட்டெடுப்போம்…


[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக