புதன், அக்டோபர் 28, 2020

மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

 மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

[வல்லமை இதழின் 280-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



கண்டதே காட்சி…
காண்பதே உண்மை…
கேட்பதே செய்தி …
           – என்று
சொன்னதை நம்பி
தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
வாழ்வியல் செய்திகளை,
சமூக நிலைமைகளை,
சரித்திர உண்மைகளை
மூடி போட்டு மறைத்து வைத்து
வனிகச் செய்திகளை
வறட்டு விவாதங்களை
பசப்பு வார்த்தைகளை
படாடோப விளம்பரங்களை
வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
உண்மை என்று வாழ்ந்து
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் வாழுகின்றோம்
சொந்தங்களை இழந்துவிட்டு
அநாதையாய் இருக்கின்றோம்....

அரசியல் வாணிகப் பாம்புகளின்
ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
மயங்கி மதிகேட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக