வெள்ளி, அக்டோபர் 23, 2020

உப்பும் மேகமும்



உப்பும் மேகமும்

[வல்லமை இதழின் 279-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 

 

ஆழக் கடலில் தான் விளையும்
ஆதவன் அருளால் உரு கொள்ளும்
கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
கொட்டும் மழையில் கரைந்து போகும்
மானுடனின் பசிதீர தான் கரையும்
வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
களவுசெய்ய ஒன்னாப் பெருஞ்செல்வம்
படிக வடிவில் உருவானப் பெட்டகமாம்
உப்பும் முகிலும் உலகம் காக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக