இன்று ஆவணி அவிட்டம். அந்த காலத்தில் வேத கற்பவர்கள் (அத்ய்யனம் செய்பவர்கள்/ செய்தவர்கள்) அதைத் தொடரவும் திரும்ப செய்யவும் உபாகர்மா என்ற இதைச் செய்தனர். ஆனால் இப்போது இது ஒரு பழக்கத்தினால் மட்டுமே தொடர்கிறது. 
ஆதி சங்கரர் (குறிப்பாக தன் மாணவர்களுக்கு) ஸாதன பஞ்சகம் என்ற ஒன்றை அருளியுள்ளார். இந்த நேரத்திற்கு அதைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். 
பொதுவாக பஞ்சகம் என்றால் ஐந்து உட்பொருளை அல்லது ஐந்து அங்கங்களை தன்னுள் கொண்டது என்பது பொருள்
ஸமஸ்க்ருத்தில், இவ்வாறு பல தொகுப்புகள் உள்ளன. அனைவரும் பொதுவாக அறிந்தது தைத்ரீய உபநிஷத்-இல் வரும் “சாந்தி பஞ்சகம்”.
|     வேதோ   நித்யம் அதீயதாம்  ததுதிதம்   கர்ம ஸ்வானுஷ்டீயதாம் தேன ஈசஸ்ய விதீயதாம் அபசித:   காம்யே மதிஸ்தஜ்யதாம் பாபெளக:   பரிதூயதாம் பவஸுகே   தோஷோ (அ)னுஸந்தீயதாம் ஆத்மேச்சா   வ்யவஸீயதாம் நிஜக்ரிஹாதூர்ணம்   வினிர்கம்யதாம்     |           வேதம்   தினமும் ஓதவும். அதன்படி கர்மாக்களை செய்யவும். அவற்றை(கர்மாக்களை) ஈஸ்வர அர்பணம் செய்யவும் மனதை சிதைக்கும் ஆசைகளை விட்டொழிக்கவும். பாவங்களையும் - பாவ சிந்தனைகளை - ஒழிக்கவும் உலக சுகம் நிலையற்றது/அதிருப்தி தருவது என அறி ஆத்மத்தை (தன்னை) அறிய விடாமுயற்சியுடன் முயல் தன்னிலையை* (அகந்தையை) துற  (*சிலர் இல்வாழ்வை என்றும் பொருள்   கூறுகிறார்கள்)  |      
|     ஸங்க:   ஸத்ஸு விதீயதாம்  பகவதா   பக்திர் த்ரிடா (அ)தீயதாம் சாந்த்யாதி:   பரிசீயதாம்  த்ரிட தரம் கர்மாசு ஸந்த்ய ஜ்யதாம் ஸத்   வித்வான் உபஸ்ருப்யதாம் ப்ரதி   தினம் தத்பாதுகா சேவதாம்  ப்ரஹ்மைகாக்ஷரம் அர்த்யதாம் ச்ருதி   சிரோ வாக்யம் ஸமாகர்ண்யதாம்  |           ஸாதுக்களைத்   துணை கொள்க. பகவத் பக்தியில் உறுதியுடன் இருக்க சாந்தி முதலிய சத்குணங்களை வளர்த்துக்கொள்க எல்லா ஆசை வயப்பட்ட செய்கைகளை கைவிடுக நல்ல   வித்வானிடம் (குருவிடம்) தஞசம் அடைக  தினமும் (மேற்சொன்னவரின்) பாத சேவை செய்க. ப்ரணவத்தை (இறையை) வழிபடுக ச்ருதி(வேத உபநிடதம்)களை ஆழ்ந்து கேட்க.  |      
|     வாக்யார்தஸ்ச   விசார்யதாம் ச்ருதி   சிரோ பக்ஷஸ் ஸமா ஸ்ரீயதாம் துஸ்   தர்காத்ஸு விரம்யதாம்    ச்ருதி மதஸ் தர்கோ அனுஸந்தீயதாம் ப்ரமாஸ் மீதி விபாவ்யதம் அஹ ரஹர் கர்வ: பரித்ய ஜ்யதாம் தேஹோ (அ)ஹம் மதிஸ்த்ய ஜ்யதாம் புத ஜனைர்வாத: பரித்ய ஜ்யதாம்  |           வேத   வாக்யங்களை சிந்தித்து உணர்க  வேத ஸ்வரூபத்தில் சரணடை (ஆதாரமாக்க் கொள்) வீண் விவாதங்களில் (கால)விரயம் செய்ய வேண்டாம். வேத(தில் உள்ள) தர்க்க நியாயங்களை கடைபிடிக்கவும் ப்ரம்மத்தை உணர்க அகந்தையை விட்டொழிக்கவும் உடலே தான் என்ற எண்ணத்தை விடு கற்றுணர்ந்த சான்றோர்களுடன் வாதிட வேண்டாம்  |      
|     க்ஷுத்   வ்யாதீஸ்ச சிகித்ஸ்யதாம் ப்ரதிதினம் பிக்ஷெளஷதம் புஜ்யதாம் ஸ்வாத்வான்னோ   நது யாச்யதாம் விதிவசாத் ப்ராப்தேன ஸ்ந்துஷ்யதாம் சீதோஷ்ணாதி   விஷஹ்யதாம் நது   வ்ருதா வாக்யம் ஸமுச்சார்யதாம் ஒளதாஸீன்யம்   அபீப்ஸ்யதாம் ஜனக்ருபா   நைஷ்டுர்யம் உத்ஸ்ருஜ்யதாம்  |           பசி   பிணிக்கு சிகிச்சை எடு. [என்ன சிகிச்சை ...] தினம் பிக்ஷையால் கிட்டும் உணவை மருந்தென உண்க. சுவை/போகத்திற்காக (பொருளைத்) தேட வேண்டாம் கர்மதினால் கிட்டுவதை (வத்து) திருப்தி அடையவும் தட்ப வெப்பங்களை சகித்து(ஏற்று)க் கொள்க வீணான பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள். உலக நடப்புகளால் பாதிக்கப்படாதிருங்கள் பிறரின் கருணையையோ நிந்தனையையோ பொருட்படுத்தாதீர்  |      
|     ஏகாந்தே   ஸுகமாஸ்யதாம் பரதரே   சேத: ஸமாதீயதாம் பூர்ணாத்மாஸு   ஸமீக்ஷ்யதாம் ஜகதிதம்   த்தாபாதிதம் த்ரிச்யதாம் ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம் சிதி   பலாத் நாப்யுத்தரை ஷ்லிஷ்யதாம் ப்ராரப்த    த்விஹ் புஜ்யதாம்  அத பரப்ரஹ்மாத்மானமஸ்தீயதாம்  |           தனிமையில்   (அமைதியில்) இனிமை காணுங்கள் மனதை அமைதியுடன் இறைவனை எண்ணவும் எங்கும் இருக்கும் ப்ரம்மத்தை உணருங்கள் இந்த உலகானது மாயத்தோற்றமே என்றுணருங்கள் பூர்வ ஜென்ம கர்ம வினைகளை வெல்ல முற்படுங்கள் (வருங்கால) வினைகளை அறிவால் விடுபடவும் பழைய கர்ம வினைகளை அனுபவித்தே தீர்த்துவிடுங்கள் பின் தானே ப்ரம்மன் என்றுணர்ந்து (அதிலே) கரைக.  |      
தமிழ் மொழி பெயர்ப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்/நெறி படுத்தவும்.
  
நல்ல விஷயம்... வேதங்களில் பல விஷயங்கள் புதையுண்டு கிடக்கின்றன. ம்... சாதன பஞ்சகம்... புதிய விஷயம். பகிர்ந்தமைக்கு நன்றிடா.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
பதிலளிநீக்குபஞ்சகத்தோட அர்த்தம் அழகாக வந்துருக்கு! புதிய விஷயத்திற்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி, தக்குடு.
பதிலளிநீக்கு