புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகன் ஐந்தணி


 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணேச பஞ்சரத்னம் ...
முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

பூரண மோதகம் கைக்கொண்டவனே
காரணம் முக்திக்கு ஆனவனே- நெற்றிச்
சூரணமாய்க் கலைச் சூடிநின்று
ஆழிசூழ் உலகைக் காப்பவனே
தான்தலை என்றே நின்றவர்க்கே
தான் தலைவன் என ஆகிநின்றுத்
தீயரை நாசம் செய்வித்த வி
நாயகன் உனைத்தினம் வணங்கிடுவோம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

பயமெனும் பேரிருள் போக்கிடவே புது
ஞாயிறுயெனவே எழுந்தவனே
தேவாசுரர் பாதம் பணிந்திடவே அவர்
மூவாப்பிணியை முடிப்பவனே
சூரர்கள் தொழுதிடும் அதிபதியே நிதி
சாரமதைத் தினம் காப்பவனே
வாரண முகத்து மூலவனே
சூரகணங்களின் நாயகனே மஹா
ஈஸ்வரன் இணையாம் உனைத் தொழுதால்
சாஸ்வதமாய் பரம் கிட்டிடுமே.

ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

ஈரேழ் உலகினைக் காத்திடவே
வீழ்த்திடுவான் தைத்யக் கூட்டத்தையே
பானைபோல் வயிற்றைக் கொண்டவனே
யானையின் முகத்தொடு அருள்பவனே
ஐங்கரத்தொடு புகழ் கொண்டவனே பெருங்
காருண்யத்தால் மன்னித்தருள்பவனே
உள்ளத்திலுண்மைக் கொண்டு தினம்
பொலிந்திடும் கரியைத் தொழுதிடுவோம்

அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

விந்தை பலதினம் செய்திங்குச்
சிந்தை நோயைத் தீர்ப்பவனே
தந்தையாம் திரிபுரம் வென்றவனின்
முந்தை புதல்வனாய் உதித்தவனே
இந்திரன் அகந்தையைக் கொன்றவனே
அந்தியில் நிலையாய் இருப்பவனே
தந்தத்தை சொந்தமாய் கொண்ட கரி
தந்தலை தனையேச் சூடியவன்
ஐந்துகரத்தனைப் பாடிடுவோம்.

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம்

தந்தத்தை சுகந்தவாய் வைத்திருப்பான் அந்தி
மந்தகனை அழித்தொழித்திடுவான் மூடர்
சிந்தித்து அறியா உருவத்துடன் அன்பர்
நெஞ்சத்தில் என்றும் நிரந்தரமாய் - ஒற்றை
தந்தத்தைக் கொண்ட வாரணத்தைச்
சந்ததம் நாமும் போற்றிடுவோம்.

பலச்ருதி:
மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோக தாம தோஷதாம் ஸுஸா ஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்


நூற்பயன்
ஐந்தணி இதனை கருக்கொண்டு – அதி
காலையில் சிந்தித்து த்யானிக்க
நோயற்ற வாழ்வுடன் தோஷமி்ன்றி
நிம்மதியுடனே நற்புத்திரரும்
நரைதிரையில்லா நீளாயுள்
வரையேதுமில்லாத அனுபூதிடன்
பெற்றே நற்கதி எய்திடலாம்.

4 கருத்துகள்: