திங்கள், டிசம்பர் 02, 2019

நாற்காலி ஆட்டம்


நாற்காலி ஆட்டம்
[வல்லமை இதழின் 234-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



வெற்று கோஷத்திலே,
வீண் வாதத்திலே,
மதமாச்சரியத்திலே,
சாதி அபிமானத்திலே,
சுயநலத் தாக்கத்திலே
சூழ்நிலைக் கைதியாகி
தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
தலைவர்களை வீழ்த்திவிட்டோம்...

மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

தேர்ந்தெடுத்த மக்களையே
ஒரு பொழுது மேலேற்றி பின் கீழ்தள்ளி
மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும
குறுமதிகொள் சிற்றோரை
அரியாசனம் ஏற்றிவைத்து
அறிவிழந்து வாழ்கின்றோம்...

கொள்கைக் கோலம் கலைந்து
பின்புலமும் களையிழந்து
எடுப்பார் கைப்பிள்ளையாய்
ஏமாற்றம் அறியாமல்
குரங்காட்டம் கண்டு
குதூகளித்து அமர்ந்துள்ளோம் ...

2 கருத்துகள்: