சனி, டிசம்பர் 24, 2011

கடமை கண்ணியம் கட்டுப்பாடு (அனுமத் ஜெயந்தி)

இன்று அனுமத் ஜெயந்தி. அதை ஒட்டிய ஒரு கதை.

பூலோகத்தில் திருகார்த்திகை நாள்.

தேவலோகம். அங்கு, அது நள்ளிரவுக்கும் பொழுது புலருவதற்கும் இடைப்பட்ட நேரம். ஆம், பூமியின் ஒர் ஆண்டு தேவலோகத்தில் ஒரு நாள் அல்லவா?

ஆயினும் இந்திரனால் ஓய்வெடுக்க முடியவில்லை. காரணம், இராவணன். அவனை நினைத்தாலே தேவர்களுக்கு அச்சம் தான். ஆம், ”அவன் பிரமனிடமும் பரமசிவனிடமும் எண்ணிலா வரங்களைப் பெற்றுள்ளானே, என்ன செய்வது. விஷ்ணு நேரம் வரும் போது அவனை அழிக்க, தானே அவதரிப்பதாகக் கூறியிருகிறார். என்றாலும், அவர் ஒரு சாதாரண மானிடனாகத் தானே அவதரிப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இராவணனோ  கொடிய அரக்கன். அவனை ஒரு  சாதாரண மானிடனால் எப்படி அழிக்க முடியும்? நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்என்று நினைத்தான்.

உடனே, இந்திரனின் மனதில் நாமும் மற்ற தேவர்களும் பூமியில் தங்கள் அம்சங்களை பூமிக்கு அனுப்பலாம். அதற்கு பிரம்ம தேவரின் உதவியை நாடலாமா? ஆனால், அவர் ராவணனுக்குக் கொடுத்த வரங்கள் தானே இத்தனைக்கும் காரணம். அதனால், அவர் உதவியைத் தானாக வேண்டக்கூடாதுஎன்றும் நினைத்தான்.

சத்திய லோகம்.

பிரம்மனுக்கு, பூவுலகில்  நடக்கும் திருகார்த்திகைத் திருவிழாவை கண்டதும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் பரமேஸ்வரன்; தனக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போட்டியில் அவர்தம் அடிமுடியைக் கண்டவரே பெரியவர் என்று கூற, தான் அவருடைய முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தது நினைவுக்கு வந்து, ”மனம் ஒரு குரங்கு - என்று கூறுவர்; அன்று என் மனம் ஏன் இந்தக் குரங்குத் தனத்தைச் செய்ததுஎன்று பெண் போல நாணமுற்றார். ஆனாலும், அந்த பரமன் தன்னை மன்னித்து அருளியதை எண்ணி, “என்னே! அவரது கருணைஎன்று நினைத்தார்.

உடனே அவர் திருக்கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு பூமியில் விழுந்தது.

அது என்ன சாதாரண நீரா?

படைப்பவனின் கண்ணீர் அல்லவா. உடனே, அது ஒரு உருவம் எடுத்தது. அழகான ஆகிருதியுடனான உருவம். ஆனால், அதன் முகமோ வானரம். அதைக் கண்டவுடன் பிரம்மனுக்குத் தான் தன் மனம் குரங்கு என்று எண்ணியதால் அது குரங்கு முகத்துடன் ரிஷ்யமுகனாகப் பிறந்தது புரிந்த்து.

அது மட்டுமா? மஹா விஷ்ணு பூமியில் தோன்றுவதற்கு முன் செய்யும் ஆயத்தத்தின் ஒரு பகுதிதான் அது என்பதும் புரிந்தது. சற்று முன், தேவலோகத்தில் இந்திரன் மனதில் தோன்றிய எண்ணங்களையும் இனி நடக்க இருப்பவைகளையும் எண்ணி மனதில் சிரித்துக் கொண்டார். உடனே மஹா மாயையை அழைத்து, “தாயே, தாங்கள் அங்கு ஒரு மாயக் குளத்தை உருவாக்குங்கள்.” என்று வேண்டினார்.

அதன் படியே அங்கு ஒரு குளம் உருவானது. குளத்தைக்  கண்டதும்  அந்த ரிஷ்யமுகன்வேகமாக அந்த குளத்தில் இறங்கி நீராடினான்.

! என்ன இது. நீரில் நனைந்ததும் அவன் அழகிய பெண்ணாக உருமாறிவிட்டானே. இனி என்ன நடக்கும்?

தேவலோகத்தில் பூமியில் எப்படித் தன் அம்சத்தை அனுப்புவது என்று எண்ணிக் கொண்டிருந்த இந்திரன், பூமியில் திடீரென்று முளைத்த அந்த அதிசயக் குளத்தையும் அதில் நனைந்த உடைகளுடன் கூடிய அந்த அழகியைக் கண்டான். கண்டதும் காமுற்று இந்தப் பெண் மூலம் தன் அம்சத்தை பூமிக்கு அனுப்பத் தீர்மாணித்தான். அகலிகையைக் கண்டு காமுற்று, உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் தோன்றும்படி பெற்ற சாபமெல்லாம்  மறந்து போய்விட்டது. அப்பெண்ணை காமத்துடன் நோக்கினான். உடனே, பெண் உருவில் இருந்த அந்த ரிஷ்ய முகன் ஒரு குழந்தையை ஈன்றான்(ள்). பெண் உருவில் இருந்தாலும், அது வானரம் தானே குழந்தையும் வானரமாகப் பிறந்தது. அதைக் கண்டவுடன் ரிஷ்ய முகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆணாகிய தனக்கு எப்படி குழந்தைப் பிறந்தது என்று புரியாமல் விழித்த அவன் முன் தோன்றிய இந்திரன்  நடந்ததை விளக்கினான். அப்பொழுதுதான் அவனுக்கு தான் குளத்தில் இறங்கியவுடன் பெண்ணாக மாறியது எல்லாம் புரிந்தது. ஆனால், ஆணாகிய தான் எப்படி அந்த குழந்தையை வளர்க்க முடியும் என்று நினைத்த அவனிடம் இந்திரன், “இந்த குழந்தை பலவான். என் பலமும் உன் பலமும் சேர்ந்து, இருவரின் பலமும் கொண்டு இருக்கும்.

அதே நேரம்  தேவலோகத்தில் சூரியனின் மனம், தன் காதல் மனைவி உஷாவுடன் சேர்வதற்கான காலமானஉஷாகாலத்தை எண்ணிக் கொண்டிருந்தது. ”பூவுலகில் மானிடனாக அவதரிக்கும் விஷ்ணு, சூரிய வம்சத்தில் பிறக்கப் போவதையும் அவருக்கு துணையிருக்க தன் அம்சத்தை எப்படி அனுப்புவது?” என்றும் நினைத்துக் கொண்டிருந்தான்

அவன் முன் தோன்றிய நாரதர் பூலோகத்தில் இந்திரனின் அம்சம் பிறந்துவிட்டது என்று நடந்ததைத் தெரிவித்தார். இந்திரன் தன்னை முந்தியதை அறிந்தவுடன் சூரியன் அவசரபுத்தியுடன் தானும் உடனே அந்த பூலோகப் பெண்ணின் மூலம் தன் அம்சத்தை அனுப்ப முடிவெடுத்தான்.

அதேவேளையில் பூமியில், தான் முதல் முறை பெண்ணாக மாறிய போது இந்திரனையே மயக்கிய தன் முகத்தைப் பார்க்காததை எண்ணியரிஷ்ய முகன்அதை பார்க்க விரும்பி மீண்டும் அந்த மாயக் குளத்தில் மூழ்கி எழுந்து தன் முகத்தைப் பார்த்தான். அதே சமயத்தில் சூரியனும் இந்திரனின் அம்சத்தைப் பார்க்க பூலோகத்தில் தன் பார்வையை செலுத்தினான். அங்கே தேவர்களும் மயங்கும் அந்தரிஷ்ய முகன்-இன் பெண்ணுருவைப் பார்த்தான். உடனே தன் மனைவி உஷாவை மறந்து அந்தப் பெண் மேல் மோகம் கொண்டு அவளைக் காமத்துடன் நோக்கினான். உடனே அவள் மீண்டும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அங்கு தோன்றிய சூரியன் அக்குழந்தை தன் அம்சம் என்றும், மஹாவிஷ்ணு பூமியில் சூரிய வம்சத்தில் தோன்றும் பொழுது அவருக்கு அக்குழந்தை உதவும் என்று எடுத்துரைதான்.

நடந்த அனைத்தையும் வாயுதேவனுக்கும் நாரதர் எடுத்துரைத்து “வாயுதேவனே! நீ எப்பொழுது உன் அம்சத்தை பூமிக்கு அனுப்பப் போகிறாய்?” என குறும்புடன் கேட்டார்.

உடனே வாயுதேவனும், “முனி ச்ரேஷ்டரே! என் அம்சம் எப்போதுத் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். பூலோகத்தில் திருகார்த்திகை நேரமான இப்பொழுது, சிவபெருமானை நினைப்பது தான் தற்சமயம் என் கடமை. இதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்என்று கூறி சிவபூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

அவன் பக்தியில் மனம் உருகிய சிவபெருமான் அவன் முன் தோன்றி, “வாயுதேவனே, பூலோகத்தில் அஞ்சனா தேவியும் கேசரியும் என்னைத் தன் மகனாகப் பெற வேண்டி தவமிருந்து வருகின்றனர். விஷ்ணு, பூலோகத்தில் ராமாவதாரம் செய்யவுள்ளார். அவருக்கு உதவியாக என் ருத்ராம்சம், அஞ்சனை புத்திரன் ஆஞ்சனேயனாகத் தோன்ற இருக்கிறது. என் அம்சத்தை அஞ்சனையிடம் சேர்க்க உன்னை விட தகுதி வாய்ந்தவர் யாருமில்லை. குழந்தை என் அம்சமாக கேசரி நந்தனாக இருந்தாலும், நீ கொண்டு சேர்ப்பதால் உன் அம்சமாக உன் மனோ வேகத்தோடு மாருத புத்ரன்மாருதியாக ஈரேழு பதினான்கு லோகத்திலும் கொண்டாடப் படும்என்று அருளினார்.

தான் ப்ரம்மதேவனின் கண்ணீரிலிருந்து தோன்றிய காரணம் ரிஷ்யமுகனுக்கு விலங்கியதும் அவன் முன் இருந்த மாயையும் மாயக்குளமும் விலகின. ரிஷ்யமுகனும் தன் மானிட ரூபம் விலக்கி தன் மக்களுக்கு காவலாக அங்கேயே பர்வதமாக உருமாறினான்.

ராமாவதாரம் பூலோகத்தில் நடைபெற்ற போது, அகங்காரமும் காமமும் கொண்டு பெற்ற இந்திரனின் மகனான வாலி தானும் அகங்காரமும் காமமும் கொண்டு தன் இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியையே சிறைபிடித்தான்.  

அவசரபுத்தி கொண்ட சுக்ரீவனோ ஆராயாமல் தன் அண்ணன் வாலிதான் இறந்தான் என்று மாயாவியுடன் அவன் போரிட்டுக்கொண்டிருந்த குகையின் வாயிலை பாறையால் மூடினான். சூரியன் கண் எதிரே அழகிய பெண்ணைக் கண்டதும் தன் மனைவி உஷாவை மறந்தது போல் அரசும் அரசியும் கிடைத்தவுடன் சீதாதேவியைத் தேடுவதைக் கூட மறந்து கள்ளுண்டு களித்திருந்தான்.

ஆனால், பக்தியும் தெய்வத் தொண்டுமே கருத்தில் கொண்டிருந்த வாயுவின் புத்திரன், வாயுதேவனைப் போலவே கடமையை கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக செய்ததால் கடவுளாகவேப் போற்றப் படுகிறான். வெறும் எண்ணம் மட்டும் நன்மையை விழைந்தால் போதாது, அதற்கானச் செயலும் முறையான தானக இருக்க வேண்டும் என்று அந்த அஞ்ஜனை மைந்தனைத் துதிப்போம்.

குறிப்பு:      பொதுவாக, வாலி, சுக்ரீவனின் தாய்-தந்தையரைப் பற்றி குறிப்புகள் ராமாயணப் புத்தகங்களில் இல்லை. வட இந்தியாவின் செவி வழிக் கதைகளில், இந்திரனும் சூரியனும்  அகலிகையுடன் இணைந்ததால், வாலி சுக்ரீவர்கள் பிறந்தனர் என்று கூறுவர். ஆனால், இதற்கு புராண குறிப்பு எதுவும் இல்லை. மேலும், ஒரு முறை நடந்தால் அது மன்னிக்கக் கூடியது. அதனால் ராமன், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தது. எனவே, இது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும். இந்த ரிஷ்ய முகனைப் பற்றிக் கேரள செவி வழி கதைகளில் குறிப்புகள் உள்ளன. அதை ஒட்டியே மேலே உள்ள இந்த புனைவு.

வியாழன், டிசம்பர் 22, 2011

56 புராதன இந்திய தேசங்கள்


மாயாவதியின் உத்திரபிரதேச பிரிவினைக் காரணமாக அதன் எதிர்காலத்தைக் குறித்து எழுதிய போது, பிரிந்து கிடந்த தேசத்தைக் கஷ்டப் பட்டுச் சேர்த்துள்ளோம்; அது மீண்டும் பிரிந்து  விடுமோ என்ற பயம் எழுந்தது.

பொதுவாக இந்தியா என்பது எந்த காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று கூறுவர். ஆனாலும் பழைய புராணக் கதைகளிலும் நூல்களிலும், ’56 தேசத்தைச் சேர்ந்த அரசர்கள்’ என்ற ஒரு சொல் விரவி வரும். அவ்வப்போது, பல (நூற்றுக்கணக்கான) சிறிய அரசாங்கங்களூம், சிற்றரசர்களும் ஆண்டு வந்திருந்தாலும், பெரிய ராஜ்ஜியங்கள் என்று 56 தேச அரசர்கள் என்று தான் அனைத்து கதைகளிலும் கூறப்பட்டிருக்கும்.

அந்த காலத்திலேயே இந்தியர்கள் பாரசீகம், சீனம், கடாரம், ரோமாபுரி, துருக்கி ஆகிய நாட்டுடன் (வாணிகத்) தொடர்புடன் இருந்து வந்துள்ளார்கள்.

ஆனாலும், அந்த கதைகளில் சொல்லும் 56 தேச அரசர்களில் இந்த துணைக்கண்டத்தைச் சேராதவர்கள் இருந்ததில்லை. அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை மட்டுமே சேர்ந்தவர்கள். தனித்தனி நாடாக இருந்தாலும் (தங்களுக்குள் சண்டையிட்டு வந்திருந்தாலும்) அவர்கள் கலாசார அடிப்படையில், ஒரே நாடாக இல்லாவிட்டலும், ஒரே சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.

நம் புராண இதிகாசங்களிலும் (ராமாயணம், மஹாபாரதம்), பழைய கதைகளிலிருந்தும் (விக்ரமாதித்யன் கதைகள், மதன காமராசன் கதைகள் போன்றவை) அந்த 56 புராதன இந்திய தேசங்களைத் தொகுத்துள்ளேன்.  (தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக் காட்டவும்)
எண்
பழய பெயர்
தற்போதய பெயர் (அ) இடம்
1.        
ஹிந்து குஷ் பகுதி
2.        
வட காஷ்மீரம் – கில்கிட் பகுதி (POK)
3.        
காந்தஹார் (ஆஃப்கானிஸ்தானம்)
4.        
காஷ்மீர்
5.        
மேற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்)
6.        
பஞ்சாப் (குறிப்பாக சியால்கோட் (பாக்) பகுதி)
7.        
ஹிமாசல பிரதேசம் (குறிப்பாக காங்டா பகுதி)
8.        
கிழக்கு பலூசிஸ்தான் (பாக்)
9.        
சிந்து பகுதி (பாகிஸ்தான்)
10.     
முல்தான், மிதான்கோட் கராச்சி(!!!)
11.     
ஆரவல்லி மலைப் பகுதி (ராஜஸ்தான்)
12.     
மால்வா பகுதி [தென்கிழக்கு ராஜஸ்தானும் மேற்கு மத்திய பிரதேசமும் இணையும் பகுதி]
13.     
உஜ்ஜயினி பகுதி (மத்திய பிரதேசம் மால்வாவிற்கு அருகில்)
14.     
தென் குஜராத்
15.     
வட குஜராத், தெற்கு ராஜஸ்தான்
16.     
கோதாவரி நதிக்கரை பகுதி
17.     
ஹேஹய (ஹேயய) தேசம்
நர்மதா பள்ளத்தாக்கு
18.     
அனுப தேசம்
நர்மதை தபதிக்கு இடைபட்ட பகுதி
19.     
கருஷ தேசம்
குவாலியர் பகுதி
20.     
சேடி (Chedi) தேசம்
புந்தேல் கண்ட்
21.     
ஆபீர (யாதவ) தேசம்
ஆக்ரா பகுதி
22.     
சூரசேனம்
மதுரா புகுதி (உத்திர பிரதேசம்)
23.     
மத்ஸ்ய தேசம்
ஜெய்பூர் (ராஜஸ்தான்)
24.     
ஸால்வ தேசம்
ஹரியானா
25.     
குரு தேசம்
தில்லி + பச்சிம் ப்ரதேஷ்(மேற்கு உத்திர பிரதேசம்)
26.     
பாஞ்சாலம்
ஆவாத் ப்ரதேசம் (மத்திய உத்திர பிரதேசம்)
27.     
வத்ஸ தேசம்
அலஹாபாத் பகுதி
28.     
கோசலம்
பூர்வாஞ்சல் (கிழக்கு உத்திர பிரதேசம்)
29.     
விதேஹம்
பீஹார் நேபாள எல்லை மாவட்டங்கள்
30.     
மகதம்
பிஹார் - குறிப்பாக பாட்னா (பாடலிபுத்திரம்) அதைச் சுற்றிய பகுதி
31.     
அங்க தேசம்
தென் கிழக்கு பிஹார் (முங்கேர் மாவட்டம்)
32.     
காசி தேசம்
காசி
33.     
வங்கம்
வங்காளம்
34.     
நேபாளம்
நேபாளம்
35.     
கிம்பூருஷம்
திபெத் எல்லை பகுதி
36.     
பார்வத தேசம்
பூடான்
37.     
புலந்த தேசம்
மேற்கு உத்ராஞ்சல்
38.     
காமரூபம் / ப்ராக்ஜோதிஷபுரம்
அஸ்ஸாம்
39.     
புண்டர தேசம்
பிரம்மபுத்திரா நதிக்கரை (அருணாசல பிரதேசம்!!)
40.     
ஸுஹ்ம (ஸிம்ம!!) தேசம்
பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியா
41.     
கலிங்கம்
கரையோர ஒதிஸா
42.     
உத்கலம்
மேற்கு ஒதிசா
43.     
விதர்பம்
நாக்பூர்
44.     
அஸ்மகம்
விந்திய பிரதேசம் (தெற்கு மத்தியபிரதேசம்)
45.     
தண்டகம்
ஔரங்காபாத், நாசிக் பகுதி
46.     
மராட்டியம்
மேற்கு மஹாராஷ்ட்ரா
47.     
சாளுக்ய தேசம் (கர்நாடகம்)
வடகர்நாடகம்
48.     
கிஷ்கிந்தா
தென் கர்நாடகம்
49.     
கொங்கணம்
கோவா
50.     
ஆந்த்ரம்
(தெலுங்கானா நீங்கிய கரையோர) ஆந்திரம்
51.     
யவன தேசம்
தெலுங்கானா
52.     
த்ராவிட தேசம்
ராயல் சீமா + வட தமிழகம்
(திருவேங்கடம், -  பாலாறு பகுதி)
53.     
சோழ தேசம்
மத்திய தமிழ் நாடு
54.     
பாண்டிய தேசம்
தென் தமிழ் நாடு
55.     
கேரளம் /
சேர தேசம்
கேரளம்
56.     
ஸிம்ம (அ) ஸிங்கள தேசம்
இலங்கை

மேற்கூறிய அரசாங்கங்களில் சில நேரங்களில் மாற்றமும் இருந்துள்ளது. சமயங்களில், சில ராஜ்ஜியங்கள் சேர்ந்து ஒரே பெயரிலும், வேறு சில பிரிந்து வேறு பெயர்களிலும் வழங்கப் பட்டுள்ளன. உதாரணமாகக் கூறுவதென்றால், கிஷ்கிந்தை தனி நாடாக வழங்கப் படாமல் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்துள்ளது. ஆபீர தேசம் (யாதவர் நாடு)  முதலில் ஆக்ரா பகுதியில் இருந்தாலும் பின்னர் (கிருஷ்ணர் காளத்தில்) த்வாரகைக்கு மாறியது. சில நேரங்களில் அது குந்திநாடு என்றும் வழங்கப் பட்டுள்ளது. (குந்தி தேசமும் ஆபீர தேசமும் வேறு என்ற கருத்தும் உண்டு). த்ராவிட தேசம் பின்னர் பல்லவப் பேரரசாக மாறியது. அதே போல் கோசல தேசம் வட கோசலம் (தசரதரால் ஆளப்பட்டது), ஆனால் தென் கோசலம் (தற்போதைய சதீஸ்கர் பகுதி) என தனி தேசமாக இருந்தது (ராமரின் தாயார் கௌசல்யா இந்த கோசலத்தையே சேர்ந்தவர்).

இந்த தேசங்களைப் பற்றி (விரிவாக) எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்.