மேற்கிந்தியத் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேற்கிந்தியத் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஐந்து நாள் போட்டிகளின் முடிவு


நேற்று காலை கல்கத்தாவில் இரண்டாவது ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கின.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றி;
இந்தியா டாஸில் வென்று முதலில் மட்டையாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது;
சச்சின் 100வது சதத்தை எட்ட இருந்த எதிர்பார்ப்பு
இன்றும் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருந்த்து.
அதுவும், கல்கத்தாவின் செல்லப் பிள்ளை லக்ஷ்மண் சதம் எடுத்த நிலை.
-       மைதானம் நிரம்புவதற்கான அனைத்து அம்சங்களும் இருந்தன.
ஆனால், மைதானத்தில் இருந்தவர்களோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் சொற்பமானவர்களே. இங்கிலாந்து தவிர அனைத்து இடங்களிலும் ஐந்து நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.

இதன் காரணம் என்னவாக இருக்கும்?

1.    இங்கிலாந்து தொடரில் இந்தியா பெற்ற தொடர் தோல்விகளால் இந்தியா தன் வீட்டில் மட்டுமே வெல்லும் என்ற விரக்தி;
2.    தற்போதய மேற்கிந்திய அணி (குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து ஆடுவதில்) அத்தனைத் திறன் பெற்ற அணி இல்லை;
3.     ஐந்து நாட்களை வீணாக விளையாட்டிற்காக செலவிடுவதா என்ற மன நிலை;
4.    ஆடுகளங்களின் (மோசமான) நிலைமை;
5.    தொழில் நுட்ப முன்னேற்றத்தால் மைதனத்திலிருந்து பார்ப்பதைவிட வீட்டில் நன்றாக பார்த்து ரசிக்க முடிவது  அல்லது அலுவலகத்தில் தொலைகாட்சியிலும் வலையிலும் ஸ்கோர் தெரிந்துகொள்வது;
போன்றவற்றால் பொதுவாக ஐந்து நாள் போட்டிகளை மைதானத்தில் பார்ப்பது குறைந்திருந்தால் அது பரவாயில்லை.

ஆனால், இது ஐந்து நாள் என்ற பொன் முட்டையிடும் வாத்தை ஐபிஎல் என்ற முட்டைக்காகக் கொல்வது என்ற நிலையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. பொதுவாகவே supply அதிகம் ஆகும் பொழுது அதன் தேவை குறையும். ஒருவேளை அதிக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல், சாம்பியன் ட்ராஃபி போன்றவை தான் காரணம் என்றால், அவற்றைக் குறைக்க வேண்டியது தான் இப்போதைய தேவை. ஐபிஎல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் இடைப்பட்ட வருட்த்தில் சாம்பியன் ட்ராஃபியும் நடத்தலாம்.

ஆனால், இன்றைய ஆட்டங்களின் பட்டியல்கள் நிறைவுற்ற நிலையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை ஐசிசி கூட ஐந்து நாள் சாம்பியன் தொடரை நடத்துவது 2017-க்கு முன் சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்டது.

மைதானத்தில் ஆட்களே இல்லாமல், தொலைக்காட்சி உரிமையை மட்டும் வைத்து ஒரு தொடரை நடத்துவது சாத்தியமா? ஆட்டக்காரர்கள் அதை விரும்புவார்களா?

இது ஐந்து நாள் ஆட்டத்தின் முடிவா? காலம் தான் இதற்கு பதில் தர முடியும்.

திங்கள், ஜூலை 11, 2011

மேற்கு இந்தியா & இங்கிலாந்து தொடர்

நேற்று  மேற்கிந்திய அணியுடன் நடந்த தொடர் முடிந்தது. 

தொடரை வென்ற போதிலும், வெற்றி கணக்கு 1 - 0  என்ற அளவிலேயே இருந்தது பொதுவாகவே அணைவரையும் ஏமாற்றம் அடையவேச் செய்தது என்று கூறலாம். சற்று, லாவகத்துடன் பந்து வீசியிருந்தால், 2 - 0  என்ற கணக்கில் வென்றிருக்கலாம்.

சாதாரணமாக, மே.இ. அணியுடன் தொடரை வென்றாலே மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால், இப்பொழுது, தகுதி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாலும், சமீபத்திய உலகக் கோப்பையும், பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியும் சற்று அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், பந்து வீச்சில் ஜாகிர் இல்லாததும் பஜ்ஜீ சரியான ஃபார்மில் இல்லாததும், மட்டையில் புதிய வீரர்கள் சரிவர பரிமளிக்காததும் வெற்றிக் கணக்கை மட்டுப் படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்.

தொடரில் என்னைப் பொருத்தவரை ஜொலித்தவர்கள்:      
                   இஷாந்த், முனாஃப், ப்ரவீன், லக்‌ஷ்மண், த்ராவிட்
நிலைமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்:
                  ரெய்னா, தோனி
சொதப்பியவர்கள் : 
                  விஜய், கோஹ்லி, பஜ்ஜி (பந்து வீச்சு;  பின்னே அது தானே அவர் வேலை)


இங்கிலாந்து தொடரைப் பொருத்தவரை பெரும்பாலான பெரிய தலைகள் அணிக்குள் திரும்புவதால் அணி சற்று வலுவடைந்திருப்பதாகவே தெரிகிறது. 5 நாள் போட்டியை பொருத்தவரை 4 வேக பந்தாளர்களூடன் களம் இறங்குவதே நல்லது என நினைக்கிறேன் (பஜ்ஜி வந்தால் lower order சற்று வலுப்படும் என்றாலும் கூட). தற்போதைய 3 வேகப் பந்தாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஜாகிரும் சேர்ந்தால் நல்ல attack கிடைக்கும். மட்டையை பொருத்தவரை, கம்பீர், ஷேவாக்/முகுந்த், மும்மூர்திகள், தோனியுடன், யுவராஜ்-க்கும் வாய்ப்பு கொடுக்கலாம். யுவராஜ் பொதுவாக இங்கிலாந்துடன் நன்றாக விளையாடுபவர் - பாகிஸ்தானில் அகீப் ஜாவெத் போன்றவர்கள் இந்தியாவிடம் நன்றாக விளையாடுவது போல் - , தற்போது நல்ல ஃபார்மிலும் இருந்தார்என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் சொதப்பினால் ரெய்னா மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


இங்கிலாந்தும் - அவர்கள் வீட்டிலாவது அதிலும் 5 நாள் போட்டிகளில் - சற்று வலுவான அணிதான். 


பார்ப்போம்.