திங்கள், டிசம்பர் 09, 2019

நல்வழி

நல்வழி
[வல்லமை இதழின் 235-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


கள்ளிப்பால் கடந்து
கல்வியறிவுதான் வென்று
எட்டா அறிவுதனை
எட்டிப் பிடித்துவிட்டு
பட்டங்கள் பலபெற்று
சட்டங்கள் தானறிந்து
திட்டமிட்டு தான் வாழும்
திறமனைத்தும் பெற்றிருந்தும்
பெட்டை பிள்ளை என்று
புறம் பேசித் திரிகின்றார்!

பட்டாம்பூச்சிபோல
சிட்டாகப் பறந்திடும் கனவை
கிட்டாமல் செய்கின்றார்...
வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!

காரியங்கள் பல செய்ய
காத்திருக்கும் காலத்திலும்
காமமொன்றே காரணமாய்
காரிகையை ஆக்குகின்றார் நெஞ்சைக்
காயம்தினம் செய்கின்றார்!

உயிருள்ள பொம்மையாக
உருவத்தைப் புணர்கின்றார்
உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
உள்ளத்தைக் காண்பதில்லை...

விட்டுவிடுதலையாகி நினறு
எட்டும் எல்லை தானடைந்து - வான்
முட்டும் மலைச் சிகரம்
தொட்டுவிடச் செய்யுமொரு
வழிதேடி இருக்கின்றேன் - நல்
வழிபார்த்துக் காத்திருப்பேன்...

இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டது.

2 கருத்துகள்: