சனி, நவம்பர் 07, 2020

தேவைகள்

 தேவைகள்

[வல்லமை இதழின் 282-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
கனிவும் இனிமையும் தர வேண்டும்

கூச்சல் குழப்பம் பொய்மைகள் நடுவே
உண்மையை அறியும் அறிவு வேண்டும்
வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
தன்நிலை உணரும் மெய்ஞானம் வேண்டும்

கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக