சனி, டிசம்பர் 05, 2020

மெய் இன்பம்

மெய் இன்பம்

 [வல்லமை இதழின் 286-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




துள்ளிக் குதித்து வானம் தொட்டு
உள்ளம் உவந்துக் களித்திருக்க
நித்தமும் ஏங்கித் தவித்திருந்தால்
இன்பம் கிட்டிட வாய்ப்பு இல்லை..

வெள்ளத்தளவே மலர் நீட்டம் என்று
வள்ளுவம் கூறும் கூற்றைப் போல்
தெள்ளிய சிந்தையின் வழிவந்த
தன் திறம் இன்றி தந்திரம் இல்லை

வெள்ளை மனமும் கருணைக் குணமும்
உள்ளவர் இன்பம் அழிவதில்லை
கள்ளும் கயமையும் தந்திடும் களிப்பு
காலம் முழுவதும் தொடர்வதில்லை

தொல்லிய பெரியோர் உரைத்தது போல்
நல்லறம் செய்து உய்தலன்றி
இந்திரன் உலகம் எட்டிடவே
மந்திரம் ஏதும் இங்கு இல்லை!

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக