வெள்ளி, பிப்ரவரி 19, 2021

பிள்ளை உள்ளம்

பிள்ளை உள்ளம்

[வல்லமை இதழின் 292-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
பள்ளம் மேடு பார்ப்பதில்லை
கள்ளம் இல்லா உள்ளத்தில்
பொய்யும் கசடும் சேர்வதில்லை

விரிந்து மலர்ந்த மலரைப் போல்
சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
திறந்து வைத்த புத்தகமென – மனதை
மறைத்து மூடிப் பூட்டவில்லை

சொல்லும் சொல்லில் பொய்யில்லை
வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக