சனி, பிப்ரவரி 27, 2021

குருட்டுப் பூனை

குருட்டுப் பூனை

[வல்லமை இதழின் 295-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




பால் வைத்து பரிவுகாட்டி
மடிமீது தானமார்த்தி
தாலாட்டித் தூங்கவைத்து
அன்பு காட்டி வளர்த்தாலும்
முழுவதுமாய் நம்பவில்லை
மதிலமர்ந்த பூனையிது

தாவிச்சென்று சட்டென்று கவ்வி
தூரமாய்த் தூக்கிச் சென்று
கண்ணில் காட்டாமல்
மறைத்துப் பதுக்கிவைத்து
சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
முக்காடிட்டச் சைவப் பூனை

உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
வெளியிலே வேடமிட்டு
கள்ளத்தின் நாற்றத்தை
வார்த்தை புனுகுபூசி
தினந்தோறும் மறைத்ததினால்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வேற்றுமையை அறியாமல்
தன் பிம்பக் காட்சியினை
பிறர்மீது ஏற்றிவைத்து
இருண்டு போன உலகமென்று
கண்மூடி அழுகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக