வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஒரு வார்த்தை ஒரு லட்சம்



ஹய்யா!! தம்பி பாப்பா!! என்று மகள் துள்ளிக் குதித்ததைப் பார்த்த மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஒரே குழந்தையாக இருந்தால், அதற்கு ஒரே அடியாக செல்லம் கொடுத்து அது சுயநல வாதியாகவும், சொல் பேச்சு கேட்காமலும் போய் விடும் என்பதை நெருங்கிய குடும்பங்களில் பார்த்தும், அப்பெற்றொரின் நாங்கள் தான் அந்த தவறைச் செய்துவிட்டோம்; நீங்களாவது ஒன்றோடு நிறுத்தி விடாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளைக் கேட்டும் மற்றொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துவிட்டாலும், மகள் அதை எப்படி எதிர்கொள்வாள் என்ற கவலை இருந்ததென்னவோ உண்மை.

மருத்துவமனையில் கூடவே கவலையுடன் தம்பியா தங்கையா என்று ஆர்வத்துடன் பார்த்தும், அதே நேரம் அது என்னுடன் பேசுமா விளையாடுமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தவள் துள்ளிக் குதித்த்தும் மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஆனால், அந்த மகிழ்ச்சி 6-7 மாதங்களில் கவலையாக மாறும் என்று அன்று தெரியவில்லை.

அம்மா, பக்கத்து வீட்டு ஆன்டி தம்பியை பற்றியே உன்னிடம் விசாரிக்கிறாள். என்னைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டேன் என்கிறாரே, அது ஏன்?

அப்பா, உன் ஃப்ரெண்ட், தம்பிக்கு மட்டும் கிஃப்ட் தருகிறாரே? எனக்குக் கிடையாதா?

பாட்டி, தம்பியையே தூக்கிக் கொள்கிறாளே. என்னைத் தூக்க மாட்டாளா?

மாமா, தம்பிக்கு மட்டும பால் பாட்டில் வாங்கித் தந்திருக்கிறாரே எனக்கு இல்லையா?

தம்பி வந்த்திலிருந்தே நீ என்னை கவனிப்பதில்லை. அவனை மட்டும் கொஞ்சுகிறாய்.

இப்படி தினமும் எதற்காகவாவது போட்டி. அழுகை. இத்தனைக்கும் நாங்களும் சரி எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களும், உறவினர்களும் அவளையும் விசாரிக்கவும் அவள் தேவையை கவணித்து, கணித்து அன்பாக உரையாற்றவும் தவறியதில்லை.

இது போல் தினமும் நடந்தால் அவளுக்கு தம்பியிடம் பாசமே இல்லாமல் போட்டியும் வெறுப்பும் அல்லவா வளரும். அதனால் தினமும் லட்சம் முறை நீதான் எங்களுக்கு முக்கியம் என்பதை நானும் அவள் தாயும் சொல்லத் தவறியதே இல்லை. ஆனாலும், அவள் முழுதாக திருப்தி அடைந்த்தாக/அடைவதாகத் தான் தெரியவில்லை.

எங்கள் கவலையை மேலும் மேலும் வளர்க்க இவன் வேறு ரொம்ப படுத்துகிறான். ஒன்றரை வயதுதான் ஆகிறது; ஆனாலும், இவன் நாள் முழுவதும் ஒரு நொடி கூட சும்மா இருப்பதில்லை.

பொதுவாகவே, முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை சற்று active-ஆக இருக்கும் என்று கூறுவர். இவனோ hyper-active. அதிலும் அக்காவைச் சீண்டுவதென்றால் தேன் குடித்த நரிதான். பேச்சு தான் வரவில்லை. விஷமம் மட்டும் தேவைக்கு அதிகமாகவே.

இன்று காலை மகள், அப்பா, நாளைக்கு எனக்கு பர்த் டே கொண்டாட வேண்டாம் என்றதும் எங்களுக்கு அதிர்ச்சி.

ஏண்டா செல்லம். உன் ஃப்ரெண்ட்ஸ்-லாம் வருவார்கள். ஜாலியாக இருக்கும். எல்லோரோடும் விளையாடலாம். போன வருடம் கூட விளையாடினாயே. போன வருடம் தம்பி தூங்கிக் கொண்டே இருந்தான். இந்த வருடம் அவனும் விளையாடுவான். நல்லா இருக்கும் என்று சமாதானம் கூறினோம்

ஆமாம் அப்பா, தம்பி நன்றாக ஆடுவான். எல்லோரும் அவனையே கொஞ்சுவார்கள். என்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். அதுவும் இல்லாமல் அவன் எப்பவும் என் தலை முடியை இழுத்து, ட்ரெஸெல்லாம் கலைத்து அழுக்காக்கி விடுவான். அதனால் தான் கொண்டாட வேண்டாம். அப்படி கொண்டாடினால் அவனை கீழ் வீட்டு அங்கிளோடோ அல்லது வேறு யார் வீட்டிலோ விட்டுவிடு என்றவுடன் எங்களுக்கு ஒரே ஷாக்

என்னாடா நீயே தம்பியை வேண்டாம்னு சொன்னால் யார் அவனை வைத்துக் கொள்வார்கள். நாங்கள் அவன் உன் உடையைக் கலைக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மீண்டும் லட்சம் சமாதானங்கள்.
ஒருவழியாக சமாதானக் கொடி பறக்கவிட்டாகிவிட்டது.
மனைவி மெல்ல எனக்கு மட்டும் கேட்கும் படி, அப்பாடா ஓரளவு நிலமையை சமாளித்தாகி விட்டது. மீண்டும் அவளுக்கு வேறு டவுட் வருவதற்குள் டீவியை போட்டு சமாளிங்க என்றாள்.
செல்லம், நாம டீவி பார்கலாமா என்று அவளுக்குப் பிடித்த கார்டூன் நெட்வொர்க் போட்டால் அதில் - சிவ லீலாவோ பால் கணேஷோ - அண்ணன் முருகன், தம்பி மூஷிக வாகனனுக்கு பழம் கொடுத்ததால் (ஆமாங்க அண்ணன் தான்; வட இந்தியாவில் கார்த்திக் தான் அண்ணன்; கணேஷ் தம்பி) “உங்களுக்கு எப்பவுமே தம்பிதான் முக்கியம் என்று கோவித்துக் கொண்டிருந்தான். சடாரென்று சேனல் மாற்றினால் அங்கு, அண்ணன் ரகுவரன் தன் பெற்றோர் சிவகுமார்-ராதிகா, தம்பி சூர்யா மேல் அதிக பாசம் காட்டுவதால் அவரை மலை மேலிருந்து தள்ளிவிட, அடச்சே என்று அதைவிட வேகமாக சேனல் மாற்றினேன். அங்கேயும் விட்டார்களா கல்யாணியை கயவர்கள், அந்த சேனலில் பார்த்திபன் காவேரியின் மூத்த மகன் இளைய மகனை பூச்சிமருந்தால் கொல்ல எத்தனிக்க, “ஹூஹூம், இன்னிக்கு டீவி சரியாகவேத் தெரியவில்லை என்று கூறி அணைத்து மூட நேர்ந்தது.
மறுநாள்
ஒரு வழியாக இன்று எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. இல்லையெனில், பிறந்த நாளும் அதுவுமாக அழ ஆரம்பித்து விடுவாளோ என்று கவலைப்பட்டுக் கொண்டே புத்தாடை அணிய கூப்பிட்ட அம்மாவிடம் எதுவுமே கூறாமல் ஒத்துழைக்கிறாளே.
மெதுவாக நண்பர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராக வர, மகனுக்கோ ஒரே குஷி, ஆட்டம் பாட்டம். வந்தவர்களும் அவனின் உற்சாகத்தில் பங்கு கொண்டு அவனை உற்சாகப் படுத்தி வாயைத் திறந்து அவனை பேசத் தூண்டி அவனிடம் விளையாட, மெல்ல மெல்ல மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல் அவள் முகத்தில் கவலை, அழுகையின் ரேகைகள். சற்று தீ(சீ)ண்டினாலும் அழுதுவிடுவாள். எப்படியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும் என மனைவி வேறு ஜாடை காட்டுகிறாள்.
குழந்தையும் எத்தனை நேரம் தான் மற்றவர்களுடன் விளையாடும். அங்கிருந்த  ஒரு ஓரத்தில் ஒட்டி போய் கவலையாக நின்றிருந்த அக்காவைக் காட்டி அவளிடம் போக ஒரே அழுகை. எங்களுக்கோ வயிற்றில் புளி.
நண்பரின் கையிலிருந்துத் திமிறி அழுது அவன் பேசிய அந்த முதல் வார்த்தையில் நாங்கள் அனைவரும் அதிர்ந்தோம். அந்த ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் அது வரை இடி விழுந்த மரம் போல் இருந்த மகளின் முகத்தில் லட்சம் வாட் மின்னல்.
நண்பரின் கரத்திலிருந்துத் தாவி குதித்து மகளிடம் வந்து அவளைக் கட்டியணைத்து அவன் அன்புடன் சொன்ன அந்தஅக்கா!! என்ற ஒரு வார்த்தை எங்களின் லட்சம் சமாதான வார்த்தைகளால் ஏற்படுத்த முடியாத அமைதியையும், தன் தம்பிக்குத் தான் தான் மிகவும் முக்கியமானவள் என்ற உண்மையையும் உணர்த்திவிட்டது.
இனிமேல், அவர்களிருவரைப் பற்றி  வீணாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்ற நிம்மதியையும் எங்களுக்கு தந்தது.

செவ்வாய், அக்டோபர் 11, 2011

கோஜாக்ரி விரதம்


கோஜாக்ரி விரதம்

என் முந்தைய மஹாலய பட்சம் பதிவில் நான், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இந்த சந்திர மாத அடிப்படையிலானவைஎன்று குறிப்பிட்டிருந்தேன். மேலும் தமிழ்நாட்டில் நாம் சூரிய அடிப்படையிலான “சௌரமாதங்களைப் பின்பற்றினாலும், மாதப் பெயர்களை பௌர்ணமியின் பெயரில் வழங்குவதையும் குறிப்பிடிருந்தேன்.

இதில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், இந்த பௌர்ணமிகளை நாம் பண்டிகைகளாக்க் கொண்ட்டாடுவதுதான்.

1.   சித்திரை       -     சித்ரா பௌர்ணமி
2.   வைகாசி       -     வைகாசி விசாகம்
3.   ஆனி           -     ஆனி மூலம்
4.   ஆடி           -     ஆடிப் பூரம்
5.   ஆவணி        -     ஆவணி அவிட்டம்
6.   புரட்டாசி       -     பூரட்டாதி
7.   ஐப்பசி         -     அஸ்வினி
8.   கார்த்திகை      -     கார்த்திகை
9.   மார்கழி         -     மிருக சீர்ஷம்
[திருவாதிரையாகக் கொண்டாடுகிறோம்]
10. தை            -     தை பூசம்
11.  மாசி           -     மாசி மகம்
12.  பங்குனி        -     பங்குனி உத்திரம்

நமக்கு இவற்றில், மற்ற மாதங்களைப் போல அல்லாமல் ஆனி, ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாத பௌர்ணமிகளைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.

இன்று, வட இந்தியாவைப் பொருத்தவரை, ஐப்பசி பௌர்ணமி [நமக்கு இன்னும் புரட்டாசியே முடிவடையவில்லை; அவர்களுக்கு ஐப்பசி முடிந்துவிட்டது]. இதை சரத் பூர்ணிமா என்று விமர்சையாகக் கொண்டாடுவர் [குறிப்பாக மராட்டிய, குஜராத், கலிங்க வங்க மாநிலங்களில்]. சரத் காலம் பூர்த்தி அடைவதை ஒட்டிக் கொண்ட்டாடப் படுவது இது. விசாரித்ததில் இதை மழைக்கால அறுவடை விழாவாகக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர்.

இந்நாளில், இரவு முழுதும் விழித்திருந்து பொதுவெளியில், நிலா வெளிச்சத்தில், ஆடி பாடி கொண்டாடுவர்; அவல் பாயசம் செய்து லக்ஷ்மி தேவிக்கு படைத்து உண்டு மகிழ்வர். லக்ஷ்மி தேவி “கோ-ஜாக்ரி[கோ என்றால் யார்; ஜாக்ரி என்றால் விழித்திருப்பவர் (ஜாக்ரத் என்றால் விழிப்பு; ஜாக்கிரதை என்றால் விழிப்புடன் இருப்பது என்று வரிசையாகத் தொடரலாம்)] என்று கேட்டு அவர்களுக்கு அருள் செய்வாள்.

மற்ற மாநில மக்களைப் போலல்லாமல், கலிங்க மக்கள் (ஒரிசாவில்) இதை குமார பூர்ணிமா [அவர்களைப் பொறுத்தவரை குமரனுக்கு இன்று பிறந்த நாள்] என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், அவர்கள் முருகனை வணங்காமல், சூரிய சந்திரர்களை வணங்குகிறார்கள்.

பொதுவாகத் தமிழர்களாகிய பௌர்ணமிகளில் விழா கொண்டாடுவோம் எனப் படித்துள்ளேன். ஆனால், இந்த பண்டிகைகள் ஏன் இங்கு கொண்டாடப் படுவதில்லை; ஒருவேளை முன்னர் கொண்டாடியிருந்து இப்பொழுது வழக்கொழிந்து விட்டதா?

பொதுவாக, இந்த மாதத்தில் பகலில் வெப்பம் அதிகமாகவும், இரவில் அதற்கு மாறாக குளிர் அதிகமாகவும் இருக்கும். இதை சமன் செய்யவே இரவில் சூடான் பானம் பருக வேண்டி இதுபோல் பண்டிகை கொண்டாடி இருக்கலாம் என்று என் மராட்டிய நண்பர் ஒருவர் கூறுகிறார். இந்த வெப்பநிலை மாற்றம் நம் தமிழ்நாட்டில் கார்த்திகை/மார்கழி மாதத்தில் தான் தெரியும். ஒருவேளை அது கூட காரணமாக இருக்கலாம்.

கலவை – 5



கூடங்குள அணு ஆலை திறப்பிற்க்கு எதிராக ஞாயிறன்று இருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளனர். இதில், போராட்டக் குழுவினர் பிரதமரை சந்தித்தப் பின், பிரதமர் உயர் மட்டக் குழுவிடம் குழுவினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட குழுவிடம் கூறியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அக்குழு இந்த கோரிக்கைக்கு எதிராக எதுவும் இதுவரைக் கூறவில்லை. ஆதலால், பரிசீலனையை விரைவு படுத்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என்பதே போதுமானது என்பது என் கருத்து. பரிசீலனைக்குழு போராட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்தால் அப்பொழுது மீண்டும் இம்மாதிரி போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேட்டி ஒன்றில், மரண தண்டனை அவசியம் இல்லை; ஆனால் மிகவும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் - extreme cases -க்கு  மட்டுமே தேவைப்பட்டால் அதை கொடுக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று, உச்ச நீதி மன்றம், கசாபின் வழக்கில் தற்காலிகமாக மரண தண்டனையை நிறுத்திவைத்துள்ளது.

சென்ற வாரம், காஷ்மீர் சட்ட மன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்காதவர்கள், ஒரு நல்ல அதிரடி திரைப்படத்தைத் தவற விட்டுவிட்டார்கள். முதல்வர் உமருக்கு எதிராக அவருடைய (நேஷனல் காங்கிரஸ்) கட்சியை சேர்ந்த (ஹாஜி) முகமத் சையத் யூசஃப் குற்றம் சாட்டியதும் அதைத் தொடர்ந்த அவர் காவலிலேயே இறந்த்தைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் உமரை பதவி விலகக் கோரி சட்ட மன்றத்தை முடக்கினர். இதில் அவைத்தலைவர் நீங்கள் என்னைத் திட்டினால் நானும் திட்டுவேன்என்று மேலும் எண்ணெய் ஊற்ற எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர் மேசை மீதிருந்த மின்விசிறியை வீச ஒரே அமளி.

இருந்தாலும், மார்ச், 1989 தமிழக சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்த்துள்ள நமக்கு இது ஒரு காமெடி காட்சிதான்.

மத்திய தொலை தொடர்பு ஆணையம் “Roaming” கட்டணத்தை நீக்கத் தீர்மானித்துள்ளது. இன்றைய நிலையில் இந்தியாவில் மட்டும் தான் நாட்டிற்க்குள்ளேயே வேறு இடதிற்குச் சென்று பேசக் கட்டணம். வேறு எந்த நாட்டிலும் இது இல்லை. இந்நிலையில் இது வரவேற்கத்தக்கதே. அதிலும் எங்களைப் போல வேறு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

சென்ற வாரம் ஆப்பெல்நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். கான்சர்!!! அவருடைய ஆப்பெல் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்கள் தான் இன்றைய திறந்த வெளி கணிகளின் ஆரம்பம். பின்னர், ஐபாட் ஐபோன் என்று டிஜிடல் புரட்சியும் அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டு. அவருடைய வார்த்தையான “பசித்திரு; பைத்தியமாய் இரு (Stay Hungry; Stay Foolish)” கணிணித் துறையில் மிகவும் பிரபலம். இன்றும் கணிணித் துறையினர் இரவு பகல் பாராமல் உழைப்பதற்க்கு இந்த attitude தான் காரணம்.

நேற்று, இந்தியாவின் மிகச் சிறந்த கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் காலமானார் அர்த்(தமிழில் ”மறுபடியும்” என்ற பெயரில் பாலு மகேந்தைராவால் remake செய்யப்பட்டு அர்விந்த் சாமி நடித்த  படம்) படத்தில், இந்தி நடிகர் ராஜ்கிரனுகாக தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ க்யா கம் ஹோ இஸ் பர் சுபாரஹே ஹோஎன்று அவர் பாடிய கஜல் எப்பொழுதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எத்தனைப் பாடல்கள்!!. மென்மையான குரலும் உயர்ந்த சங்கீதமும் என்றும் அவர் பெயர் கூறும்.

2-ஜி ஒதுக்கீட்டு வழக்கிலும், ஏர்செல் நிறுவன வழக்கிலும் நேற்று சிபிஐ மாறன் சகோதர்ர்களின் வீட்டிலும் நிறுவன்ங்களிலும் சோதனை நட்த்தியுள்ளனர். சென்ற இரு வாரங்களாகவே வழ்க்கு நீர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில் இது சற்று மாற்றமே, ஆனாலும், மாறன் இப்போது சற்று தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவேத் தெரிகிறது.

அக்டோபர் 10 தேதி -  உலக மனநோய் நாள். இந்தியாவில் ஒவ்வொறு மணி நேரத்திலும் 4 பேர் மனப்பிறழ்வினால் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். அதில் மூவர் 15-லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த வயதினர் இறப்பதற்கு முக்கிய காரணம் போதிய அன்பும் வழிகாட்டலும் இல்லாத்தே. பெற்றோர் பணம் காய்க்கும் மரங்களாக மட்டுமே இல்லாமல் அன்பும் அக்கறையும் காட்டினால் இதில் பாதியாவது குறையும். செய்வோமா.

திங்கள், அக்டோபர் 10, 2011

குற்றப் பத்திரிக்கை



அக்கா என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்!!
தம்பி என்னை எழுத விடமாட்டேங்கிறான்!!
 டீச்சர் என்னைத் திட்டுகிறார்
பக்கத்தில் இருக்கும் பையன் பேசிக்கொண்டே இருக்கிறான். அதனால் டீச்சர் நடத்துவதை கவனிக்கவே முடியவில்லை!!
பக்கத்து வீட்டுப் பெண் சண்டை போடுகிறாள்

குழந்தைகளுக்கு தினமும் இது போல் யார் மேலாவது ஏதாவது குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. தினமும், இந்த குற்றச்சாட்டுகளுடன் தங்கள் பெற்றோரைக் கூப்பிட்டு உதவும்படி நச்சரிக்காத குழந்தைகளே இல்லை.

உடனே நமக்குக் குழப்பம் / வினா : “யார் நாள்தோறும் நடக்கும் குழந்தைகளின் இந்த சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது? குழந்தைகள் தானாகவே தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா? அல்லது பெற்றோராகிய நாமா?

பொதுவாக பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்குத் தங்களின் பிரச்சனைகளின் பரிமாணங்களை ஆராய்ந்து அவற்றின் தீர்வை எட்டுவது கடினம் என்று நினைக்கிறோம். இது ஒரளவு சரிதான். குழந்தைகளுக்கு சில நேரங்களில் பிரச்சனையின் அடித்தளத்தையும் அதன் தீவிரத்தையும் ஆராயும் ஆற்றல் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு அவ்வளவு அறிவாற்றல் இல்லை என்பதல்ல; அவர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை என்பதுதான் காரணம்.  ஆனால், இது போன்ற சிறு சிறு பிரச்சனைகளில் நாம் அவர்களுக்கு அவர்களாகவே தீர்வு காணும் கலையைக் கற்பிப்பதன் மூலம் அவர்களை பிரச்சனைகளை அலசி ஆராயத் தயார் படுத்த முடியும்.

சிறு பிரச்சனைகளில் கீழ் காணும் கேள்விகள் மூலம் அவர்களைத் தயார் படுத்தலாம்:

·         என்ன / எப்படி நடந்தது
·         அதன் காரணம் / காரணங்கள் என்ன
·         அதனால் என்ன / யாருக்கு / எப்படி பாதிப்பு
·         அதற்கு என்ன என்ன தீர்வுகள்; அதில் எது மிக நல்ல தீர்வு
·         அதைச் செயல் படுத்துவது எப்படி
·         அதன் விளைவு(கள்) என்ன

முதலில் குழந்தைகளை நடந்த செயல்களை விளக்கச் சொல்லி, அதில் எங்கு (அ) எதனால் பிரச்சனை விளைந்தது போன்றவற்றை அவர்களே புரிந்து கொள்ளும் படிச் செய்யலாம் அதற்கு அவர்களையே தீர்வு கூறும் படியும் செய்யலாம். பிரச்சனைக்கு சில நேரங்களில் குற்றம் கூறும் அந்தக் குழந்தையே காரணமாகவும் இருக்கலாம். அது போன்ற நேரத்தில் அவர்களின் தவறுகளை அவர்களுக்குப் புரியும்படி மென்மையாக அதே நேரம் திடமாக விளக்கவேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

குழந்தைகளிடம் பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்று உணரச் செய்வதுதான் நம் கடமை. அந்த பிரச்சனைகளைக் கையாள அவர்களை நாம் தயார் செய்ய வேண்டுமே தவிர நாம் அவர்களுக்காக பிரச்சனைகளைத் தீர்க்க நேரடியாக (Proxy போல) விழையக் கூடாது.

சிறு சிறு பிரச்சனைகளை இன்று சரியாகக் கையாளும் குழந்தைகள், எதிர்காலத்தில் தாங்களாகவே தங்களின் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் பெற்றிருக்கும்.

சனி, அக்டோபர் 01, 2011

அர்களம் - 4 [ஸ்லோகம்]


அர்களம்

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்கா க்ஷமா ஷிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே    ௧
[தேவியின் மேற்கண்ட 11 நாமங்களைக் கூறி வணங்குகிறோம்]

மதுகைடப வித்ராபி வித்யாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[மது, கைடபகர்களை அழித்து, ப்ரஹ்மனுக்கு வரமளித்தவளே (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை (த்வி என்றால் இரண்டு என்று பொருள்; இரண்டாமவர் என்றால் அடுத்தவர், அதாவது நம்மைச் சேராதவர் என்பதால் குறிப்பால் பகைவர் என்பதைக் குறிக்கும்) அழி!]

மஹிஷாஸுர நிர்நாச விதாத்ரி வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௩
[மஹிஷாசுரனை அழித்தவளே, விதாத்ரிக்கு (ப்ரஹ்மன்) வரமளிப்பவளே  (உன்னை) வணங்குகிறோம்; (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வந்திதாங்க்ரியுகே தேவி தேவி ஸௌபாக்யதாயினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௪
[(ப்ரஹ்மாதி முனிவர்களால்) வணங்கப்பட்ட பாதங்களை உடையவளே, நற்பயன்களை தருபவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ரக்தபீஜ வதே தேவி சண்ட முண்ட விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௫
[ரக்தபீஜன், சண்ட முண்டர்களை வதைத்தவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ சத்ரு விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௬
[சிந்தைக்கு எட்டாத (அடங்ககாத) பெருமைகளை உடையவளே, எல்லா பகைவர்களையும் அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ந தேப்ய: ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௭
[சண்டிகையே! எப்பொழுதும் பக்தியுடன் வணங்குபவர்களுக்கும், வணங்கும் எனக்கும் (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸ்துவத் பயோ பக்தி பூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௮
[பக்தியுடன் உன்னைத் துதிப்பவர்களின் வ்யாதியை நாசம் செய்யும் சண்டிகே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சண்டிகே சததம் யே த்வாம் (அ)ர்சயந்தீஹ பக்தித:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௯
[உனது திருவடியை எப்பொழுதும் பக்தியுடன் அர்ச்சிக்கும் அன்பர்களுக்கு சண்டிகையே (நீ) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ஸௌபாக்யம் (ஆ)ரோக்யம் தேஹி தேவி பரம் சுகம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧
[நற்பயன்களையும், ஆரோக்யத்தையும் சுகத்தையும் தரும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி த்விஷதாம் நாசம் விதேஹி முச்சகை:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௧
[பகைவர்களை நாசம் செய்யும் பலத்தை உண்டாக்கும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௨
[மங்களத்தையும், திரண்ட ஐச்வர்யத்தையும் உண்டாக்கும் தேவியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

வித்யா வந்தம் யஷஸ் வந்தம் லக்ஷ்மீ வந்தம் ஜனம் குரு
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௩
[திருவடிகளைத் தொழுதவர்க்கு வித்தை, புகழ், ஐச்வர்யம் ஆகியவை தரும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ப்ரசண்ட தைத்ய தர்பத்னி சண்டிகே ப்ரணதாய மே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௪
[பராக்ரமசாலிகளான அசுரர்களின் அகந்தையை அழிக்கும் சண்டியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

சதுர்புஜே சதுர்வர்கத்ர ஸன்ஸ்துதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௫
[நான்கு கைகளுடையவளும், நான்முகனால் துதிக்கப்பட்டவளுமான பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

க்ருஷ்ணேன ஸன்ஸ்துதே தேவி சாஸ்வத பக்த்யா த்வம் (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௬
[ஸ்ரீக்ருஷ்ணனால் நிலையான பக்த்தியோடு துதிக்கப்பட்ட அன்னையே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஹிமாசல சுதானாத் பூஜிதே பரமேசவரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி               ௧௭
[ஹிமாச்சல புத்திரியின் நாயகனால் (ஈஸ்வரனால்) பூஜிக்கப்பட்ட பரமேச்வரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

ஸுராஸுர சிரோ ரத்ன நித்ருஷ்ட சரணோ(அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௮
[தேவாசுரர்களின் தலையை ரத்தினமாக உடைய பாதங்களைக் கொண்டவளே (இங்கு வணங்கப்பட்ட என்றும் பொருள் கொள்ளலாம் சீவப்பட்ட தலைகள் காலடியில் கிடக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்) (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

இந்த்ராணி பதி ஸத்பவ பூஜிதே பரமேச்வரி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௧௯
[இந்திராணியால் தன் கணவனின் நற்குணத்திற்காக பூஜிக்கப்படும் பரமேசரியே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி ப்ரசண்டதோர் தண்ட தைத்ய தப விநாசினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨
[சக்தி வாய்ந்த தோள்களை உடைய அசுரர்களின் எண்ணங்களை அழிப்பவளே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

தேவி பக்த ஜனோத்தாமதத்தானந்தோதயோ (அ)ம்பிகே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி      ௨௧
[பக்த ஜன உத்தமர்களுக்கு ஆனந்தத்தின் உதயமாக இருக்கும் தாயே (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை அழி!]

பத்னீம் மனோரமாம் தேஹி மனோ வ்ருத்தான் ()னுசாரிணீம்
தாரிணீம் துர்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்            ௨௨
[மனோ விருத்தியை அனுசரித்து, கடக்க முடியா ஸம்சார ஸாகரத்தை தாண்டுவதற்கு உகந்த, நற்குடி பிறந்த, மனதிற்கு இனிய மனைவியை தருவாயாக]

       இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
       ஸ து ஸப்தசதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பத:
[இந்த அர்கள ஸ்தோத்திரத்தைப் படித்து தேவியின் மஹாத்ம்யம் படித்தால், அவருக்கு ஸப்தசதீ பாராயண பலன் கிட்டும்]