”அப்பா நீதான் திருடன்!!” என்று என் மகன் கூப்பிட்டவுடன் தொலைகாட்சி பார்த்துக் கொண்டடிருந்த நான் திடுக்கிட்டேன்.
கையில் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு அவன் நிற்ப்பதைப் பார்த்த பின் தான் அவன் தன்னை காவல் துறை அதிகாரியாகவும் (Inspector!!!) என்னைத் திருடனாகவும் விளையாட அழைத்தது புரிந்தது. நான் ஒளிந்து
கொள்ள அவன் கண்டுபிடிப்பான்.
சில நேரம் நான்;
வேறு சில நேரம் என் மனைவி அல்லது மகள்.
இதே போல் என் மகளும்
சில சமயம் ஆசிரியை; வேறு பொழுது மருத்துவர் அல்லது வேறு தொழில் செய்பவர் அல்லது இருக்கவே
இருக்கிறது அப்பா அம்மா விளையாட்டு. குழந்தைகளுக்கு தான் இப்படி வேறு வேறு வேஷம் போட்டு
எத்தனை விளையாட்டுகள்.
அதிலும் குழந்தைகள்
தங்களுக்குள் ஒளிந்து விளையாடும் பொழுது ”தயாரா” என ஒரு குழந்தை கேட்க (ஒளிந்திருக்கும்)
குழந்தை ”தயார்” என அப்பாவியாக குரல் கொடுக்கும். குரல் வந்த திசையில் தேட வேண்டும் என்பது
கூட அந்தக் குழந்தைக்குத் தெரியாத அப்பாவித் தனம்.
பெரியவர்களான நமக்கு
இது சில நேரங்களில் போரடிக்கும். இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் பொழுதை
மகிழ்ச்சியாக செலவிட மட்டுமே உதவும் என்பது பெரும்பாலானவர்களின் நினைப்பு,
ஆனால், வல்லுநர்கள்
இவை குழந்தையை மகிழ்விப்பதுடன் அவர்களின் கற்பனைத் திறன், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களின்
உணர்வு மற்றும் அறிவு பூர்வ அணுகு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தவும் உதவும் என்கிறார்கள். மேலும்,
இவை அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களைக் கூர்ந்து கவணிக்கவும் உதவுவதாகவும் கூறுகிறார்கள்.
பொதுவாக குழந்தைகளின்
கற்பனைத் திறன் அவர்களின் இரண்டு வயது முதல் ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்களைச் சுற்றி
நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து கவணித்து அவற்றை திரும்ப (imitate) செய்ய விழைகிறார்கள். அவ்வாறு செய்வது அவர்களுக்கு மகிழ்சி அளிக்கிறது.
எனவே, பெற்றோராகிய
நாம் அவர்கள் இது போன்ற விளையாட்டுகள் விளையாடும் பொழுது அவர்களை ஊக்குவிக்க வேண்டியது
அவசியம். சில நேரம் நாமும் கலந்து கொள்ளலாம். ஆனால், அந்த விளையாட்டில் அவர்கள் என்ன
செய்ய நினைக்கிறார்களோ அவற்றை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு அறிவுரை
கூறக்கூடாது. அவர்களாகவே அவர்களின் வழியில் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டும். முக்கியமாக நாம்
அவர்களை சுமந்து செல்ல விழையக்கூடாது.
