திங்கள், ஜனவரி 20, 2020

மனிதம் பழக்கு

மனிதம் பழக்கு
[வல்லமை இதழின் 241-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

மணற்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
புணல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
கூடி வாழ்ந்து கோடி நன்மைப் பெற்று வாழ வேண்டும்

வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்


2 கருத்துகள்: