புதன், ஜனவரி 08, 2020

பரிணாமம்

பரிணாமம்
[வல்லமை இதழின் 239-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



காக்கைக் கரவாக் கரந்துண்ணும் என்னும்
வாக்கை நினைந்து நிற்பாய் மானிடனே
யாக்கை எடுத்த பயன் பிறர்க்குழைக்க என்னும்
பாடம் கற்றுப் பரிணமிபாய் வாநரனே வா

பொய் பொறாமைத் தீக்குணங்கள் தான்விடுத்து
செய் நன்றி கொண்டார்க்கு உய்வில்லையெனும்
மெய்ப்பொருளைத் தானுணர்ந்து
உய்வு கொண்டு பரிணமிப்பாய் வாநரனே வா

கவி காட்டும் மெய்யன்பைக் கண்டுணர்ந்து
புவியணைத்தும் களிக்கும் வகைச்செய்து
பொதிகை வளர் திருநாட்டில் புது
ஆதிமந்தியெனப் பரிணமிப்பாய் வாநரனே வா

2 கருத்துகள்: