செவ்வாய், ஜனவரி 28, 2020

குறிஞ்சிப் பண்

குறிஞ்சிப் பண்
[வல்லமை இதழின் 242-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

 

வண்டு சுழன்றிடும் சோலைமிடை காதல்
கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
வெட்கங் கொண்டக் கொடிச்சியினை - கடுவனே
வேட்கையுடனேச் சேர்ந்திருப்பாய்

கொட்டும் சாரல் வெட்கைத் தவிர்க்க
கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் - அது
வானவர் உலகையே காட்டுமென்ற
வள்ளுவன் வாக்கை மெய்பிப்பாய்

நேற்று இன்று நாளையின்றி
நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
காற்றிடை நுழையாக் காதல் கொண்டு - குறிஞ்சிக்
காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

2 கருத்துகள்: