வியாழன், ஆகஸ்ட் 04, 2011

இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது போட்டி முடிவு

முதல் போட்டியை விட மோசமானத் தோல்வி

காரணங்கள்:

1. முதல் முறையில் 100 ஓட்டங்கள் அதிகமாகக் கொடுத்ததுடன், 100 ஓட்டங்கள் குறைவாக எடுத்தது.
 
2. இரண்டு முறையும் 300-ஐ கூட எட்டமுடியாத மட்டை ஆட்டம்; த்ராவிடைத் தவிர அனைவருமே சொதப்பினர். (50 ஓட்டம் எடுத்ததெல்லாம் நன்றாக விளையாடியதாகக் கூற முடியாது). வால் மிகவும் மோசம். இத்தனைக்கும் ஸ்ரீசாந்த் தவிர மற்ற அனைவரும் ஓரளவு ஆடக்கூடியவர்களே. அதிலும் ப்ரவீன் குமார் சாதாரணமாக முதல் ஆட்டக்காரராகக் கூட களம் இறங்கியவர் (local போட்டிகளில்). ஆனால், அவர் முதலிலிருந்தே ஒரு போட்டியில் கூட பொறுப்புடன் ஆட முயர்ச்சிக்கக் கூட இல்லை. ஃபார்மில் இல்லை என்றால் அது வேறு விஷயம். அது சாதாரணமாக நடப்பது தான். ஆனால், பொறுப்பில்லாமல் ஆடுவது அது தான் தவறு.

3. தோனி, நீங்க நல்லவனா இல்ல கெட்டவனா என்ற நிலைக்கு வந்துவிட்டார். Field Placing சுத்த மோசம். அதிலும், இரண்டாவது முறையில் விக்கெட் எடுக்கவும் முயல்வில்லை ஓட்டத்தை தடுக்கவும் முயலவில்லை. பின் எதற்குதான் 11 ஆட்டக்காரர்கள். ஒரே நாளில் 400-க்கு மேல் ஓட்டம்!!!!

4. முதல் முறை சரியாக வீசிய பந்து வீச்சாளர்கள் இரண்டாம் முறையில் சொத்ப்பினார்கள். முன்னரே கூறியது போல் ஹர்பஜனை ஏன் இன்னமும் தோனி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (நல்ல வேளை அடுத்தப் போட்டியில் ஆட மாட்டார்) அவருக்கு பதிலாக மிஷ்ராவை சேர்க்கலாம். சாதாரணமாக, இங்கிலாந்து வீரர்கள் லெக் ஸ்பின் சரியாக ஆடமாட்டார்கள். இருப்பினும், எனக்கு 4 வேகப் பந்தாளர்கள் தான் சரி எனத் தோன்றுகிறது. தோனியும், வீச்சாளர்கள் tired ஆனதுதான் காரணம் எனக் கூறியுள்ளார். 4 வேகப் பந்தாளர்கள் இருந்திருந்தால் அது நேர்ந்திருக்காது.

பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. புதிதாக மேலும் தவறுகள்.

மொத்தத்தில் மோசமானத் தோல்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக