திங்கள், ஜூன் 15, 2020

இடிதாங்கி மனிதர்கள்

இடிதாங்கி மனிதர்கள்

[வல்லமை இதழின்260-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


நிற்க நேரமின்றி
பிறர் பாரம் தானேற்று
வயிறு நிரப்பும்
சுமைதாங்கி மனிதர்கள்!

கொடும் நுண்ணயிரியால்
தடைக்காலம் கண்டமையால்
தடம் பார்த்து நின்றுகொண்டு
விடைதேடும் வீரர்கள்!

தொடருந்து போலத்
துயரங்கள் தொடர்ந்தாலும்
தப்பியோடும் மார்க்கமில்லா
இடிதாங்கி மனிதர்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக