சனி, ஜூன் 06, 2020

பலியாடுகள்

பலியாடுகள்

[வல்லமை இதழின்259-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
களைத்து ஒதுங்க குடிலும் இல்லை
வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
போதை தீர்ந்த நேரம் இல்லை
பாதை காணத் திறனும் இல்லை
நாளை குறித்து திட்டம் இல்லை
பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
எதிர்காலம் தொலைதது விட்டோம்…

பலிபீடத்தில் நின்றுகொண்டு
பச்சைதழை இலைகள் உண்டு
வரும் கொடுமை உணராத
பலியாட்டு மந்தைகள் நாம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக