புதன், மே 27, 2020

அடிமாடு

அடிமாடு

மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
வயக்காடு வீட்டுமனையானதென்று
ஊரைவிட்டு புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…
வந்தயிடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
சொந்தமென்று ஏதுமின்றி சுற்றி வந்தோம்
பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
சொந்தமண்ணே சொர்கமென்று திரும்புகின்றோம்….
உழைப்பதனை உறிஞ்ச விட்டு
உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
வீடு நோக்கி செல்கின்றோம் – இங்கு
அடிமாடாய் வாழுகின்றோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக