திங்கள், மே 11, 2020

மந்திரக் கோலம்

மந்திரக் கோலம்

அந்தி கருக்கும் வானத்திலே
சிந்தை மயங்கும் வேளையிலே
சந்திரனின் தன்னை வரவேற்க – இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்
விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்
எந்திர வாழ்க்கை மறந்திடுவே
மந்திர ஜாலங்கள் செய்து தினம்
சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக