சனி, மே 16, 2020

புது வேலி


புதுமைகள் புகும் நல்வேலையிலே
கலாச்சாரக் காவலன் நாமென்றுக் கூவிப்
பழமை என்னும் பூட்டுக்குப்
புது வேலி செய்துக் காவலிட்டோம்..
கண்ணியமான அன்பதனைக்
கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
காதல் என்றேக் காட்சி செய்தோம்..
அமைதி சாந்தி அகிம்சையெலாம்
அடிமைத்தனம் என்றொதுக்கி
வன்மமும் வன்முறையம் வீரமென்று
வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..
உண்மை நேர்மை என்பதெல்லாம்
வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
பொய்யும் புரட்டும் திறமையென -புது
தத்துவம் செல்லி வாழுகின்றோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக