ஞாயிறு, ஜூன் 28, 2020

கடல்விளை அமுதம்

கடல்விளை அமுதம்
நெல்வயல் காய்ந்துவிட்டால்
விவசாயி வயிறு காயும்
நெய்தல் நிலம் காய்ந்துவிட
வெண்ணமுது விளைந்துவரும்
சேற்றினில் விளைந்த வெண்படிகம்
சோற்றினைச் சுவைக்க உதவிடும்
உப்பளத் தொழிலாளி காலினிலே
மக்களின் நாச்சுவை வாழும்…
அகிம்சைப் போராட்ட நாயகனின்
அறநெறி தத்துவ வழிமுறைகள்
கடல்விளை அமுதத் துகளாக -சோற்றுக்
கலம்வழி உயிரில் புகுத்திவிடும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக