திங்கள், ஜூன் 22, 2020

மண்குதிரைச் சவாரி

மண்குதிரைச் சவாரி

[வல்லமை இதழின்261-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


மண்குதிரை மீதேறி
மாக்கடலைக் கடந்துவிட்டு
மறுகரையை அடைந்திடவே
மன்றாடும் மாந்தரைப்போல்

கண்ணிரண்டும் விற்றுவிட்டு
கவின்மிகு சித்திரத்தை
கண்டுநாளும் களித்திடவே
கனவுகாணும் மூடனைப்போல்

இயற்கை வளங்களை அழித்து விட்டு
இன்ப வாழ்க்கையைத் தேடுகின்றோம்
நிலவளம் நீர்வளம் கெடுத்து
நித்திய இன்பத்தை நாடுகின்றோம்…

சுவற்றை அழித்துவிட்டு
சுந்தர ஓவியந் தீட்டுவதுபோல்
பூமியின் வளமழித்து
புதிய சொர்க்கம் தேடுகின்றோம்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக