திங்கள், ஜூலை 06, 2020

உயிர் சுழற்சி

உயிர் சுழற்சி
[வல்லமை இதழின்262-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


பேரிச்சைப் பாலை விட்டு –
நெல்இச்சைக் கொண்டு வந்து
உரம்பாய்ச்சி வளர்த்து வைத்தக்
கதிரழித்த வெட்டுக்கிளி…
 
நாடுவிட்டு நாடுசென்று
ஏவுகணைப் போலத் தாக்கிப்
பாடுபட்டு வளர்த்த பயிர்
காவுகொண்டு போனதிங்கே….
 
பூச்சியினம் ஊர்வன உண்ணும்
ஊர்வனத்தை விலங்கு உண்ணும்
விலங்கினங்கள் காட்டில் வாழும்
உயிர் சுழற்சிப் பாடம் கண்டோம்…
 
உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
முறைதவற வைத்துவிட்டு
சிற்றுயிரிப் பூச்சியினைக்
குற்றஞ்சொல்லி ஏது பயன்…

(இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது)

2 கருத்துகள்: