வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும்

[வல்லமை இதழின் 271-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



ஒருபக்கம்…
மற்றோரின் வாழ்வு கண்டு
ஆற்றாமை கோபம் கொண்டு
விழுமியங்கள்யாவும் கெட்டு
அழுக்காறு முள்ளாய் வளரும்!

மறுபக்கம்…
எளியோரின் இன்னல் கண்டு – அவர்
துயர் நீக்கி வாழவைத்துக்
களிப்பூட்டி உய்விக்கும்
உயர் எண்ணம் பூவாய் மலரும்…

ஒரு நேரம்….
காலமதை வீணடித்துக்
களிப்பொன்றே வாழ்வென்று
முயற்சியென்ற சொல்கூட
முள்ளாய்க் குத்தும்….

மறு நேரம்….
புதுமுயற்சி பலசெய்து
பழமைகளைக் களைந்து
புத்துலகம் படைப்பதற்கு
உத்வேகம் பூவாய் மலரும்…


வாழ்க்கையென்ற செடியினிலே
வளர்வது முள்ளா? மலரா?
வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை!

சில நேரங்களில் ….
முள் கொடுத்த சுகானுபவமும்
மலர் கொடுத்த காயங்களின் வடுக்களும்
அனுபவ வானில் மின்னலாய்க் கீற்றுவிடும்!

2 கருத்துகள்: