திங்கள், ஆகஸ்ட் 03, 2020

கழு மேலமர்ந்த குரங்கு


கழு மேலமர்ந்த குரங்கு
[வல்லமை இதழின் 267-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 
 


 

ஜாதிமத அபிமானதாலும்
கையூட்டுப் பணத்திற்கும்
மதுப்போதை மோகத்திற்கும்
வெற்று விளம்பரத்திற்கும்
சிற்றின்பக் கவர்ச்சிக்கும்
கற்றகல்வித் தனைமறந்து
பட்டறிவும் தானிழந்து
மக்களாட்சித் தந்துவைத்த
வாக்குரிமையை விற்றுவிட்டு
பாடுப்பட்டுக் கிட்டிய கனியமுதை
எட்டி தூரம் எறிந்துவிட்டு
தோலைமட்டும் வைத்துக்கொண்டு
செய்வதறியாதுத் திகைத்து நின்று
கூழ்முனைக் கழுமரம்
மேலமர்ந்த குரங்கெனக்
கலங்கிநின்று உழலுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக