ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

சுற்றம்

 சுற்றம்

தளிரா?மரமா?
தனி மனிதனா? சமூகமா?
விதை வீழ்ந்து
சிறு முளை விட்டு
நாற்றாகி, தளிராகி,
சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
கிளை விரிந்துப் பெரு மரமாகி நின்றாலும்
தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
ஆகையின்…
தளிரே மரத்தின் ஆதாரமோ?
எனில்…
பற்றும் கிளையின்றி தண்டின்றி
உணவளிக்கும் வேரின்றி
மரத்தின் துணையின்றி
தளிருக்கு வாழ்வு ஏது?
ஆகையின்…
மரமே தளிருக்கு ஆதாரமோ?
மரமின்றித் தளிரில்லை
தளிரின்றி மரமில்லை
அதுபோன்று
பிறப்பு முதல் இறுதிவரை
உருத்து காட்டும் உறவு வேண்டும்
பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
மனிதம் வாழ நற்சமுகம் வேண்டும்
சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்
ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை
சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக