வெள்ளி, ஜனவரி 01, 2021

புதுப்பாதை

 


புதுப்பாதை

[வல்லமை இதழின் 290-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




துள்ளிக் குதித்து
புத்தகப் பையைத் தூக்கி
பள்ளிக்குச் செல்ல முடியவில்லை
அள்ளித் தெளித்துப் போட்டு வைத்தக் கோலம் அழித்து ஓடி
விஷமம் செய்ய முடியவில்லை
வெயிலில் புழுதியில்
உடைகள் அழுக்காக்கி
ஆட்டம் போட முடியவில்லை
கையில் காலில் சிறுகாயம் கொள்ள
தாய்தந்தைத் தேற்றும்
விளையாடல் இருக்கவில்லை….

முகமறியா நபர்களிடம் பழகத்
தடை விதித்தார்கள்; இப்போது
முகம்மூடா நபர்களைக் காணமுடிவதில்லை….

வீட்டை விட்டு வெளியே வந்து
ஆட்டம் போடமுடியவில்ல
கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
சிறகை விறித்து உலகம் காணவில்லை…

ஜன்னல் காட்சியே உலகம் ஆனது
பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது
எத்தனைக் காலம் சும்மா இருப்பது
புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக