வியாழன், செப்டம்பர் 29, 2011

அர்களம் - 2


அர்களம் - 2



முதல் பகுதியில் கூறியது போல் அர்களம் பாராயணம் செய்யும் முன் தேவியை அவள் திருநாமங்களால் துதிக்க வேண்டும்.

தேவிக்கு பல நாமங்கள். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவை [உதாரணத்திற்கு லலிதா ஸஹஸ்ர நாமம்]

ஆனால், பொதுவாக தேவீ மஹாத்ம்யம் பாராயணம் செய்பவர்கள் தேவீயை, அவள் யோகமாயை - 64 யோகிநி சித்திகளை அருள்பவள் -என்பதால்  அவளை கீழ் கண்ட 64 யோகிநி சித்த நாமங்களால் அஷ்டகமாகவே பாடித் துதிப்பர்.

ஓம் ஐம்,

திவ்யயோகி மஹாயோகி ஸித்தயோகி கணேச்வரி
ப்ரேதாஷீ டாகிநீ காளீ காலராத்ரி நிஷாசரி                ௧

ஐங்காரீ ஊர்த்வ்வேதாளீ பிசாசீ பூதடாமரீ
ஊர்த்வகேசீ விரூபாக்ஷீ சுஷ்காங்கீ நரபோஜிநீ             ௨

ராக்ஷஸீ கோரரக்தாக்ஷீ விஷ்வரூபீ பயங்கரீ
சாமுண்டீ வீரகௌமாரீ வாராஹீ முண்டதாரிணீ          ௩

ப்ராமரீ ருத்ரவேதாளீ பீஷ்மரீ த்ரிபுராந்தகீ
பைரவீ த்வம்ஸிநீ க்ரோதீ துர்முகீ ப்ரேதவாஹிநீ          ௪

கட்வாங்கீ தீர்கலம்போஷ்டீ மாலிநீ மந்த்ரயோகிநீ
கௌசிகீ மர்திநீ யக்ஷீ ரோமஜங்காப்ரஹாரிளீ             ௫

காலாக்நிக்ராமணீ சக்ரீ கங்காளீ புவநேச்வரீ
பட்காரீ வீரபத்ரேசீ தூம்ராக்ஷீ கலஹப்ரியா                ௬

கண்டகீ நாடகீ மாரீ யமதூதீ கராளிநீ
ஸஹஸ்ராக்ஷீ காமலோலா காகதம்ஷ்ட்ரீ அதோமுகீ      ௭

துர்ஜடீ விகடீ கோரீ கபாலீ விஷலங்கிநீ
சது:ஷஷ்டீ: ஸமாக்யாதா யோகின்யோ வரஸித்திதா:       ௮

நித்யம் ஸ்மரணமாத்ரேண ஸர்வ பாபக்ஷயோ பவேத்.

அத நாமாநி

இதில் முதல் ஸ்லோகத்திலிருந்து எட்டாம் ஸ்லோகத்தின் முதல் வரி வரை 64 யோகிநிகளின் பொயராக உள்ளன. எட்டாவது ஸ்லோக கடைசி வரியில் 64 யொகிநிகளூம் சிறந்த ஸித்திகளைக் கொடுக்கக் கூடியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடைசியாக பலச்ருதி - தினம் இவர்களை நினைத்த அளவிலேயே அனைத்து பாபங்களும் நீங்கும் - எனக் குறிப்பிட்டுள்ளது.

அன்னையை வணங்கி அவளின் யோகிநி நாமங்களைத் துதிப்போம்.

1 கருத்து: