ஞாயிறு, மார்ச் 10, 2013

திருவிளையாடல்


சிவபெருமான் மதுரையம்பதியில் நடத்திய அறுபத்தி நான்குத் திருவிளையாடல்களை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். இந்தத் திருவிளையாடல்கள் முருகப்பெருமானால் அகத்திய முனிவர் மூலம் பரஞ்சோதி முனிவருக்கு உரைக்கப்பட்டதாகக் கூறுவர். அவ்வாறு சிவபெருமான் நடத்தியருளிய திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படலமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த 64 திருவிளையாடல்களின் தொகுப்பை இந்த சிவராத்திரி நாளில் பார்ப்போம்…

மதுரைக் காண்டம்
1.        இந்திரன் மூல லிங்கமான கடம்பவன நாதரான சோம சுந்தரரின் திருவடிவை சிவலிங்கமாக ஸ்தாபனம் செய்து வழிபட்டு சாபம் தீர்த்த படலம்
2.        இந்திரனின் வெள்ளை யானை ஐராவதத்தின் சாபம் தீர்த்த படலம்
3.        திருநகரம் உருபெற்ற படலம்
4.        மலையத்வஜனுக்குக் குழந்தை வரம் அருளிய படலம்.
5.        மலையத்வஜன் மகளை மணந்து மதுரையம்பதியை ஆண்ட படலம்
6.        வெள்ளியம்பலத் திருக்கூத்து – சந்த்யா தாண்டவம் – ஆடி அருளிய படலம்
7.        குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
8.        அன்னக்குழியும் வைகை நதியும் உருவான படலம்
9.        அலைகடலை அழைத்த படலம்
10.     மலையத்வஜன் கைலாயம் எய்திய படலம்
11.     உக்கிரபாண்டியன் திரு அவதார படலம்
12.     உக்கிரபாண்டியன் – காந்திமதி திருமண படலம்
13.     கடல் சுவற (வற்ற) வேல் எறிந்த படலம்
14.     இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
15.     மேருவைச் செண்டால் அடித்த படலம்
16.     வேத மெய்ப்பொருள் அருளிச் செய்த படலம்
17.     மாணிக்கம் விற்ற படலம்
18.     மதுரையைச் சூழ்ந்த கடலை வற்றச் செய்த படலம்

கூடல் காண்டம்
19.     நான்மாடக் கூடல் ஆகிய படலம்
20.     எல்லாம் வல்ல சித்தர் உரு கொண்டு எழுந்தருளிய படலம்
21.     கல்யானை கரும்புக் கழி தின்ற படலம்
22.     யானையை வேலெய்து கொன்ற படலம்
23.     வ்ருத்த(முதிய), குமார, பாலக உரு எடுத்த படலம்
24.     கால் மாற்றி  ஆடிய படலம்
25.     பழி அஞ்சின படலம் (மறைந்த உண்மையை எடுத்தருளிய படலம்)
26.     பாதகம் செய்த அந்தணனின் பழி தீர்த்த படலம்
27.     தீவினையாளனை மாய்த்து அங்கம் நீக்கிய படலம்
28.     அவுண நாகம் எய்த படலம்
29.     மாயப்பசுவை வதைபுரிந்த படலம்
30.     படை திரட்டி நின்ற படலம்
31.     குண பூஷண பாண்டியனுக்குப் உலவாக்கிழி (பொற்கிழி) அளித்த படலம்
32.     வளைவிற்று ரிஷிபத்னிகள் சாபம் தீர்த்த படலம்
33.     கார்த்திகைப் பெண்டிருக்கு அட்டமா சித்தி உபதேசித்த படலம்
34.     விடையிலச்சினை இட்ட படலம்
35.     தண்ணீர் பந்தல் வைத்துத் தாகம் தீர்த்த படலம்
36.     ரசவாதம் புரிந்த படலம்
37.     சோழனை மடுவில் வீழ்த்திய படலம்
38.     நல்லானுக்கு உலவாக் (நெற்குதிர்) கோட்டை அளித்தருளிய படலம்
39.     மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
40.     வரகுண பாண்டியனின் சாபம் (திருவிடை மருதூரில்) தீர்த்து சிவலோகம் காட்டிய படலம்
41.     விறகு விற்றருளிய படலம்
42.     திருமுகம் கொடுத்த படலம்
43.     பாணபத்ரருக்குப் பொற்பலகையிட்ட படலம்
44.     (பாணபத்திரர் மனைவி) பத்திரைக்கு வெற்றியளித்த படலம்
45.     பன்றிக்குட்டிக்குப் பாலூட்டிய படலம்
46.     பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்
47.     கரிக்குருவிக்கு உபதேசித்த படலம்
48.     நாரைக்கு முக்தியளித்த படலம்
திருஆலவாய் காண்டம்
49.     திரு ஆலவாய் ஆகிய படலம்
50.     (படைவீரராகப்) பேரம்பு எய்தி போர் புரிந்த படலம்
51.     தமிழ்ச் சங்கம் அமைத்த படலம்
52.     வரகுண பாண்டியன் ஐயம் தீர்த்த படலம்
53.     தருமிக்குப் பொற்கிழி வழங்கியருளிய படலம்
54.     நக்கீரரைக் கரையேற்றிய படலம்
55.     தமிழ்ச் சங்கக் கலகம் தீர்த்த படலம்
56.     இடைக்காடருக்கு அருளிய படலம்
57.     நந்தியெம்பெருமான் சாபம் நீத்த படலம்
58.     திருவாதவூராரை (மாணிக்க வாசகர்) ஆட்கொண்ட படலம்
59.     நரிகளை பரிகளாக மாற்றிய படலம்
60.     பரிகளை நரிகளாக மாற்றிய படலம்
61.     பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பெற்ற படலம்
62.     சுந்தர பாண்டியன் கூன் நீக்கிய படலம்
63.     திருஞான சம்பந்தருக்கு அருளிய படலம்
64.     வன்னியும் கிணறும் சிவலிங்கம் அழைத்து சாட்சி சொன்ன படலம்

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

8 கருத்துகள்:

  1. நல்லதொரு நாளில் சிறப்பான தொகுப்பு...

    ஓம் நமசிவாய நம...

    பதிலளிநீக்கு
  2. சிவராத்திரியை ஒட்டி எழுதிய பதிவு அருமை!
    சிவராத்திரி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள்.....

    பகிர்வுக்கு நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  4. சிவ கடாக்ஷம் பரிபூரணம்.

    வாழ்க. வாழ்க.

    பதிலளிநீக்கு