திங்கள், மார்ச் 16, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-3)

ஓடிஸியஸ் இதாகாவை அடைதல்
(பகுதி-3) 






பைகளை வைத்துக் காற்றைக் கட்டுப்படுத்தி கப்பலை தன் நாட்டின் பக்கம் திருப்பிய ஓடிஸியஸ், வெகுநாட்களாகத் தூக்கமின்றி பயணம் செய்த களைப்பில் அசந்து தூங்கி விட்டான். கப்பல் அவர்கள் நாட்டை நெருங்கிக் கொண்டிருந்த்து. ஆனால், அப்பொழுது அவனுடன் இருந்த இருவர் தங்களுக்குக் காட்டாமல் ஓடிஸியஸ் அந்தப் பையில் வைத்திருக்கும் பொருட்களை அபகரிக்க நினைத்து அந்தப் பையை திறந்தனர். உடனே, அதில் அடைக்கப்பட்ட பல திசைக் காற்றுகளும் சீறிப் பாய்ந்து சீற்றமான புயலை உருவாக்கின. காற்றின் சீற்றத்தால், கப்பல் நிலைத் தடுமாறி பின்னோக்கிச் சென்றது. இதற்கிடையில் பாலிஃபீமஸ் விவகாரத்தில் கோவமாக இருந்த போஸிடன் தன் மகனான ஏயோலஸ்க்கு பாலிஃபீமஸின் நிகழ்வைக் கூறி ஓடிஸியஸுக்கு உதவக் கூடாது என்று கூறிவிட்டார். இதனால், ஏலியோஸ் இம்முறை ஒடிஸியஸுக்கு உதவ மறுத்துவிட்டார். மனமுடைந்த ஒடிஸியஸ் மீண்டும் தன் பயணத்தைத் துவக்கினான்.
சில நாட்கள் பயணம் செய்த பின்னர், ஒரு நள்ளிரவில், கப்பல் ஒரு தீவை நெருங்கியது. அதன் பெயர் டெலிபிலோஸ். அந்தத் தீவுக்கு இயற்கையாக ஒரு பாதுகாப்பு அரண் இருந்தது.  இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு குறுகிய பாதை வழியே பயணித்து தான் கப்பல் அந்தத் தீவை அடைய முடியும். மற்ற வீர்ர்களின் கப்பல் அதில் நுழைய ஓடிஸியஸ் மட்டும் அதனுள் நுழையாமல், வெளியேயே தன் கப்பலை நங்கூரமிட்டு, தன் இரண்டு வீர்ர்களை தீவை ஆராய அனுப்பினான். அவர்கள் அங்கு ஒரு பெண்ணைக் கண்டனர். அவள், அவர்களைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். கோட்டையை நெருங்கியதும் அங்கு ஒரு மிகப் பெரிய ராட்சத வடிவம் கொண்ட பெண் தன் கணவனை அழைக்க அந்த ராட்சதன் அவர்களில் ஒருவனைத் தூக்கித் திங்க ஆரம்பித்தான். உயிருக்குப் பயந்து மற்றவன் ஓட அவனை அத்தீவின் மற்ற ராட்சதர்கள் துரத்தினர். துறைமுகத்தில் கப்பலைக் கண்ட ராட்சதர்கள் அதன் மீது பெரிய பாறைகளை வீசினர். ஓடிஸியஸின் கப்பல் வெளியே நங்கூரமிட்ட்தால் அது மட்டும் தப்ப மற்ற கப்பல்கள் நொறுங்கின. ஓடிஸியஸ் சில வீரகளுடன் அந்தத் தீவிலிருந்துத் தப்பினான்.

அங்கிருந்து தப்பிப் பிழைத்து பயணித்தக் கப்பல் ஏயியா என்ற தீவை வந்தடைந்த்து. அது, சிர்ஸ் (Circe) என்ற சக்தி வாய்ந்த சூனியக்காரி வாழும் தீவு ஆகும். தீவுக்கு வெளியே கப்பலை நிறுத்திய ஓடிஸியஸ் இரண்டு வீர்ர்களை தீவை ஆராய அனுப்பி வைத்தான். தன் மந்திர சக்தியால் ஓடிஸியஸின் வீரர்கள் தீவுக்கு வருவதை சிர்ஸ் அறிந்திருந்தாள், வீர்ர்கள், சிர்ஸ் தன் அரண்மனையில் ஒரு பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க அவளைச் சுற்றிக் காட்டு மிருகங்கள் இருப்பதைக் கண்டனர்.. அம்மிருகங்கள், சிர்ஸால் விலங்குகளாக மாற்றப்பட்ட மனிதர்கள் ஆவர். வீர்ர்கள அவளை சந்தித்த பொழுது அவள் தந்த பானங்களைப் பருக வீரகள் இருவரும் பன்றிகளாக மாறினர். தொடந்து வீர்ர்கள் திரும்பி வராமல் இருக்க, அவர்களைத் தேடி ஓடிஸியஸ் தானே தீவுக்குச் செல்ல முடிவெடுத்தான். அப்பொழுது அவனுடைய முன்னோரான ஹெர்மெஸ் கடவுள் (Hermes – பயணிகளின் கடவுள் – அவரது மகன் செஃபலஸ் – பேரன் லாரடெஸ் – லாரடெஸின் மகன் ஓடிஸியஸ்) ஒடிஸியஸை மோலி என்ற பூண்டு வகை மூலிகையின் திரவத்தை உட்கொள்ளச் சொன்னார். அதனால், சிர்ஸின் மந்திரங்களால் ஓடிஸியஸை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் மந்திரங்கள் ஓடிஸியஸை மாற்ற முடியவில்ல என்றவுடன் சிர்ஸ் அவன் வீர்ர்களை திரும்ப மனிதர்களாக மாற்ற சில நிபந்தனைகளை விதித்தாள். அதன்படி, ஓடிஸியஸ் அவளைக் கூட, அவர்களுக்கு டெலிகானஸ் என்ற மகன் பிறக்கிறான். [வேறு சில கதைகளில், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் – அர்டியாஸ்  என்ற அக்ரியஸ், லத்தினாஸ், டெலிகானஸ் - பிறந்ததாகவும் கூறப்படுவதுண்டு.] பின்னர், அவன் தன் நாடு திரும்பும் விருப்பத்தைத் தெரிவிக்க சிர்ஸ் அவன் வீர்ர்களை மனிதர்களாக மாற்றி அவனுடன் அனுப்பினாள். அதற்கு முன், அவள் ஓடிஸியஸை பாதாள உலகம் சென்று அங்குள்ள கடவுள்களை (குறிப்பாக டைரேசியஸ் என்ற குருட்டு தீர்க்கதரிசியை) வணங்கவும் இறந்தவர்களுடம் பேசும் தந்திரம் கற்றுக் கொள்ளுமாறும் கூறினாள். இவை, அவன் நாடு திரும்பும் பொழுது அவனுக்கு மிகவும் உதவும் என்று கூறினாள்.

அவள் கூறியபடியே பாதாள உலகம் சென்ற ஓடிஸியஸ் அங்கு, அச்செர்ரோன் நதிக் கரையில், க்ரேக்கரகளின் எமனான ஹேடஸுக்கு பலி கொடுத்தான். பாதாள உலகில் குருட்டு தீர்க்கதரிசி டைரேஸியஸ் அவன் முன் தோன்றி அவன் நாட்டிற்க்கு செல்லும் வழியில் அவனை தடுக்க இருக்கும் தடங்கல்களையும், ஸ்கைலா, சாரிப்டிஸ் என்ற இரு அரக்கர்களைப் பற்றியும், தடைகளைக் கடந்து செல்வதற்கான வழியையும் ஓடிஸியஸுக்குக் கூறினார்.
பாதாள உலகத்தை விட்டு வெளியேறிய ஓடிஸியஸும் அவன் ஆட்களும் பின்னர் பல நாட்கள் பயணம் செய்தனர். ஒருநாள் திடீரென்று விசித்திரமான குரல்கள் அவர்களுக்குக் கேட்க ஆரம்பித்தன. இடையே அருமையான கீதங்களும் ஒலித்தன. அதைக் கேட்டவுடன் அவர்கள் மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர். சிர்ஸ் முன்னரே எச்சரித்த்தால், தாங்கள் சைரன்களின் தீவை நெருங்கிவிட்ட்தை ஓடிஸியஸ் உணர்ந்தான். அவள் கூறியிருந்தபடி, அந்த குரல்கள் கேட்காமல் இருக்க அனைவரையும் காதில் மெழுகால் மூடக்கொள்ளச் சொன்னான். ஆனால், தான் மட்டும் அந்தக் குரல்களை கேட்க விரும்பி தன் காதுகளை மூடிக் கொள்ளாமல் தன்னைக் கப்பலின் தூணில் கட்டிப்போடச் சொன்னான். சைரன்களின் இனிமையான குரல்களைக் கேட்ட ஓடிஸியஸ் தன்னை விடுவித்துக் கொண்டு தீவை நோக்கிச் செல்ல பகீரதப் ப்ரயத்தனம் செய்தான். ஆனால், தீவை நோக்கிச் செல்ல அவன் போட்டக் கூச்சலோ சைரன்களின் குரல்களோ கேட்காததால் மாலுமிகள் கப்பலை அத்தீவிலிருந்து விலகி செல்லும் படி செலுத்தினர். தீவிலிருந்து வெகு தூரம் சென்றபின் சைரன்களின் ஒலி மறைந்தது.

பின்னர் கப்பல் ஆறு கைகளைக் கொண்ட ஸ்கைலா என்ற ராட்சசியும் சாரிப்டிஸ் என்ற சுழல் வடிவிலான ராட்சதனும் வாழும் பகுதியை அடைந்தனர். சாதாரணமாக ஆறு தலை ராட்சசியைப் பார்த்தவுடன் அங்கிருந்து விலகிச் செல்லும் கப்பல்கள் சாரிப்டிஸின் சுழல் வாயில் விழுந்து இறப்பார்கள் அவர்களை இருவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். டைரேசியஸின் எச்சரிக்கைப் படி ஸ்கைலாவிடமிருந்து விலகிச் செல்லாமல் அவள் அருகில் செல்ல அவள் தன்னுடைய ஆறு தலைகளால் ஆறு வீரகளைப் பிடித்துக் கொள்ள அவர்களை விட்டுவிட்டுத் தன் கப்பலை வெகு வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றுத் தப்பினான். ஆறு வீர்ர்கள் இறப்பார்கள் என்பதை முன்னரே அறிந்திருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே பலியாக விட்டுவிட்டுச் சென்றான் என்பதே உண்மை. எதிர்காலத்தில் அவர்களுக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தினான் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு உடல் உலைச்சலுக்கு ஆளான வீர்ர்களும் மன உலைச்சலுக்கு ஆளான ஓடிஸியஸும் சற்று இளைப்பாற வழியில் இருந்த த்ரினேசியா என்ற தீவுக்கு அருகில் தங்கள் கப்பலை நங்கூரமிட்டனர். அது சூரிய கடவுளான ஹீலியஸுக்கு சொந்தமானது. அங்குள்ள கால்நடைகளுக்கு எந்த்த் தீங்கும் நேரக்கூடாது  என்று முன்னரே டைரேசியஸ் எச்சரித்திருந்தார். ஆனால், ஓடிஸியஸின் கட்டளையை மீறி சில வீர்ர்கள் அவற்றைக் கொன்று புசித்தனர். இதனால், கோபமடைந்த ஹீலியஸ் தான் பாதாள் உலகம் சென்று மறைவதாகவும் இனி மீண்டும் உதிக்க மாட்டேன் என்றும் ஜீயஸிடம் (க்ரேகர்களின் இந்திரன்) கூறினார். அதைத் தடுத்த ஜீயஸ், ஓடிஸியஸ் தீவை விட்டுச் செல்லும் பொழுது அவன் கப்பலைத் தாக்குவதாகக் கூறினார். அவ்வாறு தாக்கும் பொழுது, அந்த மாமிசம் உண்ட அனைவரும் இறந்தனர். இடியால் கப்பலும் நொறுங்கியது. ஓடிஸியஸ் மட்டும் அங்கிருந்து நீந்தித் தப்பிச் சென்றான்.

பல மைல் தூரம் நீந்திய ஓடிஸியஸ் மயக்கமடைய கடல் அலைகள் அவனை ஒரு தீவுக்குக் கொண்டு சென்றன. அத்தீவின் பெயர் ஓகிஜியா. அங்கு கலிப்ஸோ (Calypso) என்ற கன்னிதேவதை (nymph) வசித்து வந்தாள். அவள் ஓடிஸியஸ் மீது மோகம் கொண்டாள். அவள் அவனைக் காப்பாற்றினாள். ஓடிஸியஸ் அவளுடன் சில காலம் தங்கியிருந்தான். அவர்களுக்கு நௌசிதோஸ், நௌசினோஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்தன. (சில கதைகளில் சிர்ஸின் மகனான லத்தினாஸ் கலிப்ஸோவின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஓடிஸியஸ், மீண்டும் தன் நாடு திரும்ப ஆசைப்பட்டான். ஆனால், கலிப்ஸோ அவனைத் தன்னுடன் இறுதிவரை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டாள்.  அவள் ஓடிஸியஸிடம்,, தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, அவனுக்கு அமரத்துவம் அளிப்பதாகவும் வாக்களித்தாள். ஆனால், ஓடிஸியஸ் தன் நாட்டிற்குத் திரும்பி தன் மனைவி மக்களுடன் வாழவே விரும்புவத்தாக்க் கூறினான். அதனால், அவனை சிறையில் அடைத்து வைத்தாள். அத்தீவில், அவன் 7 ஆண்டுகள் தங்கியிருந்தான். அவனுடைய ப்ரார்த்தனையைக் கண்ட அவன் இஷ்ட தெய்வமான ஏதென்னா (க்ரேக்கர்களின் சரஸ்வதி – அதனால் தான் ஓடிஸியஸ் அனைத்தும் அறிந்தவன் என்றும், அவனிடம் அனைவரும் ஆலோசனை கேட்பார்கள் – பல நேரங்களில் அவள் ஓடிஸியஸுக்கு உதவுகிறாள்) ஜீயஸிடம் முறையிட அவர் ஹெர்மெஸ் வழியாக அவனை விடுவிக்கும் படி கலிப்ஸோவிற்குக் கட்டளையிட்டார். அதை மறுக்க முடியாத கலிப்ஸோ அவனை விடுவித்தாள். அவனுக்கு ஒரு படகை அளித்து அவன் நாடு திரும்ப அனுமதித்தாள். ஆனால், வழியில் மீண்டும் புயலில் சிக்கிய ஓடிஸியஸ் வேறு ஒரு தீவில் கரை ஒதுங்கினான்.

அது பையக்சியர்கள் வாழும் தீவு. கடற்கடவுளான போஸிடன்,, கோர்கீரா (அசொபோஸ் நதிக்கும் மெடோப் என்ற நதி தேவதைக்கும் பிறந்தவள்) என்ற நீர் தேவதையின் மீது மோகம் கொண்டு அவளை இந்தத் தீவில் கடத்தி வைத்த்தாக்க் கூறுவர். அவர்களுக்கு பிறந்தவர்கள் பையாக்ஸிகள். கரையோரத்தில், புயலால் தன் படகையும் உடைகளையும் இழந்த, ஓடிஸியஸைக் கண்ட அத்தீவின் இளவரசி நௌசிசா (நாஃப்சிகா என்றும் கூறுவர்), தாங்கள் துவைக்க்க் கொண்டுவந்த துணிகளை அவனை உடுத்தவைத்து, தன் தந்தை அல்சினொஸ் இடம் அனுப்பி அவர் மூலம் தன் தாய் அரெட்-ஐச் சந்திக்கச் சொன்னாள். அங்கு, ஒரு விழா நடந்து கொண்டிருந்தது. அதில், ட்ராய்-ஐ க்ரேக்க வீர்ர்கள் வீழ்த்தியதைப் பாடலாகப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் ஓடிஸியஸின் சாகசங்களைப் பாடிய பொழுது அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் வழிந்த்து.

அவனைத் தனியே அழைத்துச் சென்ற அரசனும் அரசியும் விசாரித்தனர். அப்பொழுது, ஓடிஸியஸ் தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும், அவன் அணிந்திருந்த உடை தன் மகளுக்காகத் தான் தயாரித்த உடை என்பதைக் கண்ட அரெட், அவனை வற்புறுத்தி அவனைப் பற்றிய உண்மைகளைக் கூறும்படிக் கேட்டனர். ஓடிஸியஸ் தான் யார் என்பதை வெளிப்படுத்தினான். அவனைத் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி அல்சினாஸ் கோரிக்கை விட நௌசிசா மிகவும் சிறிய பெண் என்பதால் தான் அவளை மணப்பது சரியல்ல என்று ஓடிஸியஸ் மறுத்தான் [பின்னர், அவன் மகன் டெலிமாசஸ், நௌசிகாவை – கிட்டத்தட்ட அர்ஜுனனின் மகன் அபிமன்யு, உத்திரையை மணந்த்து போன்றே – மணந்தான்]. அவனது, கதையையும் நிலைமையையும் கண்ட அவர்கள் ஓடிஸியஸை அவனது நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவழியாக ஓடிஸியஸ் அவனது தாய் நாடான இதாகாவை வந்தடைந்தான். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல அங்கும் அவனுக்குப் பல சோதனைகள் காத்திருந்தன.

வற்றை டுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக