வியாழன், ஏப்ரல் 23, 2020

கண்ணாம்பூச்சி

கண்ணாம்பூச்சி
மழைத்தரும் நீர்த்துளியை
புழைசெய்துத் தேக்கிவைக்க
வழியேதும் செய்யாமல்
காலமதைக் கழித்திருந்தேன்
சுற்றுப்புறம் மாசு செய்யும்
குற்றங்களை நிறுத்திடாமல்
வெற்றுச் செயல்களையே
கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்
புயல் வருமோர் காலந்தன்னில்
சுயமுயற்சி ஏதுமின்றி
இயலாமைக் காப்புபூட்டி
முயலாமல் நின்றிருந்தேன்
பட்டுபோன பழமைகளை
மனதினிலே தேக்கிவைத்து
புதுமைகளைத் துரத்திவிட்டு
புரட்சிக்காகக் காத்திருந்தேன்
அறியாமைக் காரிருளில்
புரியாமல் நின்றிருந்தது
விதியாடும் கண்ணாம்பூச்சியென
வீணனாக உழலுகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக