சனி, ஜூலை 25, 2020

முதுமை


முதுமை
[வல்லமை இதழின் 266-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 
 
 
தட்டில் சோறு வைத்திட்டு – வீதியை
எட்டிப் பார்த்துச் சொந்தங்கள் தேடும்
வீட்டுப் படிகளே நாற்காலியென
வாட்டம் காட்டிடும் பருவம்…
 
வாழ்வின் சுவடுகள்
முகம் முழுதும் எழுதிய
கவிதை வரியால் நிறைந்த
அனுபவப் புத்தகம்…
 
காலமெல்லாம் கடந்தும்
பட்ட கட்ட நட்டங்கள்
அட்ச தீர்க்க ரேகைகளாய்
அலைமோதும் ஜீவகோளம்…
 
கடந்ததை எண்ணித் தேங்கிடாமல்
வருவதை எதிர்பார்த்துக் காத்திராமல்
இருப்பதை வைத்து இயல்பாய்
நாட்களைக் கடத்துவதே முதுமை…
 

2 கருத்துகள்: